பெரிய கோவில் திருவிழா கோலகலமாக நடந்துக்கொண்டு இருந்தது. பெரிய கோவில் என்றால் தஞ்சாவூர் பெரியகோவில் கிடையாது. மன்னார்குடியில் உள்ள பெருமாள் கோவில் . வட்டார ஜனங்களால் இது பலகாலமாக பெரிய கோவில் என்றுதான் அழைக்கப்பட்டு வருகிறது. யானைக்கால் மண்டபம் சாமி புறப்பாடுக்கு தயாராகும் முன்பே தங்கையன் அங்கே இருந்தாக வேண்டும். இல்லையன்றால் பலூன் கடை போட இடம் இருக்காது. இன்று சூரிய பிரபை வேறு.. இன்று கடையை சீக்கிரம் போட்டால்தான் நல்ல காசு பார்க்க முடியும். பலூன் கட்டி தொங்கவிடும் அந்த கம்பியை எடுத்துக்கொண்டு மகன் வேலுவையும் கூட அழைத்து சென்றார். வேலு கையில் ஒரு பை வைத்திருந்தான். அதில் காற்று நிரப்பபடாத பலூன்கள், காற்று நிரப்பும் பை, காசுகளை போட்டு வைக்க ஒரு பெட்டி ஆகியவை இருந்தன. எல்லாம் அப்போதுதான் புதிதாக வாங்கிய பலூன்கள் அவற்றை வேலு முகர்ந்து பார்த்தான். அந்த பலூன் வாசனை அவனுக்கு மிகவும் பிடித்து போனது. வேலு குறவர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு கல்வி அளிக்க கட்டப்பட்டுள்ள மணிமேகலை அரசு பள்ளியில் படித்து வருகிறான். கணக்கில் அவன் கெட்டிகாரன். இதனாலேயே கூட்ட நெரிசலான காலத்தில் பணத்தை எண்ண பா...