கொடூர கொலை வழக்குகள் வைதேகி பாலாஜி 144 பக்கங்கள் மர.ண தண்டனை என்பது பல நாடுகளில் எப்போதுமே சர்ச்சையை ஏற்படுத்தும் ஒரு விஷயமாகதான் இருக்கிறது. அரசாங்கமாகவே இருந்தாலும் கூட ஒரு உயிரை பறிப்பதற்கான உரிமை யாருக்குமே கிடையாது என்பது பொதுவான கருத்தாக இருந்து வருகிறது. இந்த கருத்துக்கு பல நாடுகள் உட்பட்டுள்ளன. அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் என 155க்கும் அதிகமான நாடுகள் தற்சமயம் மர.ண தண்டனையை நீக்கியிருக்கின்றன. சில நாடுகள் வெளிப்படையாக அமலில் வைத்துள்ளன. ஆனால் சில நாடுகள் அரிதாக மட்டுமே மரண தண்டனையை பயன்படுத்துகின்றன. இந்த குற்றவாளிக்கு அரசாங்கத்தாலேயே மன்னிப்பு வழங்க முடியாது என நினைக்கும் அளவிற்கு கொடூரமான குற்றங்களை செய்த குற்றவாளிகளுக்கு மட்டும் அரிதாக மரண தண்டனை வழங்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் இறுதியாக ஆட்டோசங்கர் எனப்படும் கௌரி சங்கருக்கு 1995 ஆம் ஆண்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அதற்கு பிறகு இப்போது வரை அப்படியான தண்டனை யாருக்கும் வழங்கப்படவில்லை. இந்த புத்தகத்தை பொறுத்தவரை இந்தியாவில் கொடூரமான குற்றங்களை செய்து மரண தண்டனை பெற்ற முக்கிய குற்றவாளிகளை பற்றிய தகவல்களை வழங்குகிறது இந்...