Skip to main content

Posts

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...
Recent posts

தீ பரவட்டும் - அறிஞர் அண்ணா

  தீ பரவட்டும் அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா தொடர்ந்து நிறைய முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனதில் பதித்தவர் என்பது பலருமே அறிந்த விஷயமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா மூவரிடமும் ஒற்றுமையாக உள்ள ஒரு விஷயம் என்றால் எதிர்ப்பு காட்டுவது என இறங்கிவிட்டால் பின் விளைவுகளை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அப்படியாக இந்து புராணங்களை பேசும் ராமாயணம், பெரிய புராணம் ஆகிய இரண்டு நூல்களை எரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துக்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் பிராமணிய கொள்கைகளை பரப்புவதாக இவை இருக்கின்றன என்பதே இவர் முன் வைக்கும் வாதமாக உள்ளது. அதற்காக அண்ணா ஆற்றிய உரைகள்தான் இந்த புத்தகம். ராமாயணத்தை பொறுத்தவரை அது தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான கருத்தை முன் வைக்கிறது. அப்படிப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்து அதை தமிழர்களிடமே விற்பனை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழில் எவ்வளவோ முக்கிய இலக்கியங்கள் இருக்கும்போது மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது ராமாயணத்தில் என்பது அவரது கருத்து, அதே போல பெரியபுரா...

வியாசனை அறிதல் - ஜெயமோகன்

  வியாசனை அறிதல் ஜெயமோகன் உலகம் முழுக்க இருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புராண கதைகள் என்று ஒன்று இருக்கும். அப்படியாக இந்தியாவில் முக்கியமான புராண கதையாக இருந்து வருவது மகாபாரதம். எப்படி இப்படி ஒரு கதையாடல் பல வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது என நினைக்கும் அளவிற்கு மனித உணர்ச்சிகள் மீது விளையாடும் ஒரு இலக்கியம். ஹாலிவுட்டில் வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையை விடவும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கும் மோசமான விளைவுகளை மகாபாரதம் வெளிச்சம் போட்டு காட்டும். மகாபாரதத்தை எழுதியவராக கருதப்படும் கிருஷ்ண துவைபாயனார் வியாசர் என்பவரை பற்றி ஜெயமோகனின் பார்வையில் இருந்து இந்த புத்தகம் செல்கிறது. என்னை பொறுத்தவரை மகாபாரதத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புராணமாகவும் தெய்வ கதையாகவும் மாற்றியதே அந்த கதை விரிவாக வரவேற்பை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது என நினைக்கிறேன். கௌரவன் புத்தகத்தை எழுதிய ஆனந்த் நீலகண்டன் அந்த புத்தகத்தில் கூறும்போதும் கூட மகாபாரதத்தை படிப்பவர்கள் அதில் பிழையென கண்டறியும் விஷயங்கள் அப்போது எழுதியவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். என்கிறார். இருந்தும் அவை அப்படியே எழு...

வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்

  வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார் வாழ்க்கை முழுக்க எதையோ தேடி எது எதுக்கோ ஓடின பிறகு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் நாம் ரசித்து வாழ்ந்தோமா என தெரியாது. வாழ்க்கையை ரசித்து அதனை வேடிக்கை பார்த்து வாழ தெரிந்தவர்கள் இப்பூவழகில் சொற்பமானவர்களே அப்படியானவர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமார் தன் கண்ணால் பார்த்த அனுபவித்த உலகை புத்தகத்தின் வழியாக நமக்கு தெரிவிக்கிறார். நா முத்துக்குமாரின் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள்தான் இந்த புத்தகம். நா முத்துக்குமார் கவிஞனாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவரின் தந்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர். தன் வருமானத்தில் அதிகமாக புத்தகங்கள் மட்டுமே வாங்கி வாழ்ந்து வந்தவர்தான் நா முத்துக்குமாரின் தந்தை. நா முத்துக்குமார் இப்படி ஒரு கவிஞனாக மாற காரணமாக இருந்தவர் அவரே. ஒரு சமயம் நா முத்துக்குமார் தன் தந்தையிடம் ஏன் நாம் ஓட்டு வீட்டில் இருக்கிறோம். இதனால் என் நண்பர்களை கூட என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை என கூறுவார். அதற்கு அவரது தந்தை நீ உன் நண்பர்களை இரவு வேளையில் அழைத்து வா நம் வீட்டில் வீட்டுக்குள் ...

பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்)

  பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்) ஆர்தர் கோனான் டாயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு டிடெக்டிவ் நாவல் கதாபாத்திரம். இவருக்கு நான் இண்ட்ரோ கொடுக்க தேவையில்லை. உலகம் முழுவதும் இப்போது வரும் துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு துப்பறியும் கதைகளுக்கு ஒரு இலக்கணமாக ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹொம்ஸ் உள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வந்த பிறகு அவர் உண்மையிலேயே லண்டனில் இருக்கிறார் என்பதாக பலரும் நம்ப துவங்கினர். பிறகு பேக்கர்ஸ் தெருவில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு அவர்கள் கடிதங்களை எழுத துவங்கினர். உண்மையில்   அப்படி ஒரு முகவரியே அப்போது இல்லை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் பொஹிமியாவில் ஒர் அவதூறு, அடையாளம் குறித்த வழக்கு, செந்தலையர் சங்கம் ஆகிய மூன்று கதைகள் உள்ளன. மூன்றுமே சுவாரசியமான கதைகள். ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் உள்ள மிகப்பெரிய ட்ரிக் என்னவென்றால் அவரது நண்பரான வாட்சனின் பார்வையின் வழிதான...

புதிய வரலாறு - அறிஞர் அண்ணா

  பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது. இப்போது விஜய்யை எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ் திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய புத்தகம்தான் இந்த புதிய வரலாறு. ஏதோ இளைஞர்கள் எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள். துரைமுருகன், வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்த...

புளிக்க வைத்த அப்பம் - Book Review

  வன்முறை யார் மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம் உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1. தன் தேசத்தில் யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். உலகம் முழுக்க உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன் பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல் இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர். இவளும் இப்படிதான் வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள ப...