மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...
தீ பரவட்டும் அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா தொடர்ந்து நிறைய முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனதில் பதித்தவர் என்பது பலருமே அறிந்த விஷயமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா மூவரிடமும் ஒற்றுமையாக உள்ள ஒரு விஷயம் என்றால் எதிர்ப்பு காட்டுவது என இறங்கிவிட்டால் பின் விளைவுகளை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அப்படியாக இந்து புராணங்களை பேசும் ராமாயணம், பெரிய புராணம் ஆகிய இரண்டு நூல்களை எரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துக்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் பிராமணிய கொள்கைகளை பரப்புவதாக இவை இருக்கின்றன என்பதே இவர் முன் வைக்கும் வாதமாக உள்ளது. அதற்காக அண்ணா ஆற்றிய உரைகள்தான் இந்த புத்தகம். ராமாயணத்தை பொறுத்தவரை அது தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான கருத்தை முன் வைக்கிறது. அப்படிப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்து அதை தமிழர்களிடமே விற்பனை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழில் எவ்வளவோ முக்கிய இலக்கியங்கள் இருக்கும்போது மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது ராமாயணத்தில் என்பது அவரது கருத்து, அதே போல பெரியபுரா...