Skip to main content

Posts

Showing posts from 2021

Dear Comrade Movie Review

பல்லை கடிச்சிக்கிட்டு மொத பாதியை மட்டும் பார்த்துட்டா அடுத்த பாதி அருமையான படம். ஆதித்ய வர்மா, இஸ்பேர் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில் வரும் ரோசமான ஹீரோக்கள் வகையாறாவை சேர்ந்தவர் நம்ம ஹீரோ. இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்பவும் சுய நலமாத்தான் இருப்பாய்ங்க. கூட இருக்குற நண்பர்கள் சாப்பிட்டாய்ங்களான்னு கூட கேக்க மாட்டான். ஆனா நண்பர்கள் இந்த ஹீரோவை குழந்தை போல பாத்துக்குவாய்ங்க. டையப்பர் மாத்திவிடாததுதான் குறை. அது என்னான்னா அப்படி ஒரு நண்பர் கூட்டம் இருந்தா தான் ஹீரோவால என்ன வேணா செய்ய முடியும் இல்லையா. இப்படியாக ஹீரோ தோன்றுவய்ங்க எல்லாரையும் அடிச்சிட்டு சுத்திட்டு இருக்குறப்ப தலைவி ராஸ்மிகா எண்ட்ரி நம்ம ஹீரோ பொம்பள பிள்ளையல்ட்ட எப்பவும் கடு கடுன்னேதான் இருப்பார். ராஷ்மிகாக்கிட்டயும் அப்படியே கடு கடுன்னு ஒரு முதல் சந்திப்பு. அதுக்கு பிறகு ரெண்டு பேருக்குள்ளயும் காதல் வருது. டெல்லிக்கே ராஜான்னால்லும் பல்லிக்கு புள்ளதான என்பது போல் காதல், அதனால் ஏற்படும் பிரிவு. நம்ம அடித்தடி ஹீரோவை திருத்துகிறது. இதுல ராஸ்மிகாவோட கதாபாத்திரம் கொஞ்சம் தேவலையா இருந்துச்சு. எப்போதும் இந்த போக்கிரி பயக ...

பறவைகளை கொன்று பண்டிகை கொண்டாடும் நம் மக்கள்

ஒவ்வொரு வருடமும் தீபாவளியை கோலாகலமாக கொண்டாடி வருகிறோம். என்னதான் பட்டாசுகளின் விலை அதிகமானாலும் காசு செலவு செய்து பட்டாசு வாங்குவதை நாம் நிறுத்துவதே இல்லை. ஆனால் தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் நாம் வெடிக்கும் ஒவ்வொரு பட்டாசும் பறவைகளுக்கு ஒரு மோசமான விளைவை ஏற்படுத்துகின்றன. தீபாவளிக்கு அடுத்த நாளில் உடல் கருகி, இறகுகள் மட்டும் எரிக்கப்பட்டு என கண்டெடுக்கப்படும் பறவைகள் வருடத்திற்கு வருடம் அதிகமாகி வருகின்றன. பட்டாசுகளில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடு, சல்பர் டை ஆக்சைடு மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற மாசுக்கள் தீபாவளி சமயத்தில் காற்றில் அதிகமாக கலக்கப்படுவதால் பறவைகள் பாதிக்கப்படுகின்றன. மேலும் இது ஆஸ்துமா போன்ற பிரச்சனை உள்ள மனிதர்களையும் பாதிக்கிறது. பட்டாசுகளின் உரத்த ஓசையானது பறவைகளை வெகுவாக பாதிக்கின்றன மற்றும் பயமுறுத்துகின்றன. பறவைகளை இது மனதளவில் பாதிக்கின்றன. இதனால் அவற்றால் மற்ற பறவைகளை தொடர்பு கொள்ள முடிவதில்லை. சில பறவைகள் இதனால் இரவு முழுவதும் கூட்டிற்கு செல்லாமல் வானத்திலேயே ஓய்வில்லாமல் பித்து பிடித்தது போல சுற்றிக்கொண்டிருக்கின்றன. பறவைகள் அதிக உணர்திறன் க...