தாத்தா சொன்ன கதைகள் கி.ராஜநாராயணன் பக்கங்கள்: 260 இலக்கிய வட்டாரத்தில் நாவல் கதைகள் படிப்பதெல்லாம் பிரயோஜனமற்ற விஷயம் என நினைக்கும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் படிக்கும் வரலாறுகளுக்கு முன்பே கதைகள் உருவாகிவிட்டன. மனித நாகரிகத்தில் எழுதக்கூடிய சான்றோர்கள் பெரிதாக இல்லாத சமயங்களிலேயே வரலாறுகள் கதைகளின் வழியாகதான் பரவி வந்தன. வழிப்போக்கர்கள், வணிகர்கள் சொன்ன கதைகள்தான் மக்கள் தாங்கள் பார்க்காத உலகை கதைகளின் வழியே பார்க்க உதவின என கூறலாம். கதைகள் அதிக முக்கியமானவை. இந்தியா மீது அலெக்சாண்டர், முகலாயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் படையெடுக்க காரணமாக இருந்தவை கதைகளே. இந்தியா குறித்த செவி வழி கதைகளே அதை பற்றிய பிரமாண்டமான தோற்றத்தை உண்டாக்கியது. இந்த மாதிரியான கதைகளில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. கதையை சொல்லக்கூடிய ஒவ்வொரு நபரும் சுவாரஸ்யத்திற்காக எதையாவது கூட்டியோ குறைத்தோ கதையை மாற்றி அமைத்து சொல்ல முடியும். அவை முழுக்க உண்மை என கூற முடியாது. ஆனால் கதைகள் சமக்கால வரலாறுகளை தன்னுள் சுமந்து கொண்டுள்ளது. எனவேதான் நாட்டுப்புற கதைகளுக்கு எப்போதுமே...