Skip to main content

Posts

Showing posts from September, 2019

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாராயணன் - 2

எவ்வளவு நேரம் இப்படியே மயங்கி கிடந்தார் என்று நாரயணனுக்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவர் போட்டிருந்த உடைகளும் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிந்தது. உடலின் பாகங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. ஏதோ ஒரு யோசனையில் போட்டிருந்த அனைத்து உடைகளையும் கழற்றி எறிந்தார். “ஒரு வேளை கனவு ஏதும் கண்டுகொண்டு இருக்கிறோமோ. போய் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டால் கனவு கலைந்து நிஜ உலகிற்கு சென்றுவிடலாம்”   என யோசித்தார். ஆனால் கனவில் மயக்கமாக முடியாதே. முற்றிலும் குழப்பமாக இருந்தது. மீண்டும் கண்ணாடியை எடுத்து பார்த்தார். இந்த முறை முகம் சுத்தமாக தெரியாமல் போயிருந்தது. “இது என்னடா நமக்கு வந்த சோதனை… நேற்று பகவானிடம் குடும்ப பிரச்சனை குறித்து வஞ்சனையாக சில திட்டுக்கள் திட்டியதால் பகவான் நமக்கு சாபமளித்துவிட்டாரா?” மிகவும் குழப்பமாக இருந்தது நாரயணனுக்கு. திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம் “இது ஏன் நமக்கு கிடைத்த வரமாக இருக்க கூடாது”. நாராயணன் ஒரு கலாச்சார காவலர் .மனைவி இடை தெரிவது போல ஆடை உடுத்தினாலே திட்டுவார். அதற்கு காரணம் உண்டு அவர் பெண்கள் மேல் அதிக ஈடுபாடு உடையவர். கோவிலுக்கு மனைவியோடு செல்லு...

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாரயணன்

“சாணியில் என்ன மணக்குதோ தினமும் என்ன கரைக்க விட்டுடுறாள் இந்த சுக்கு” புலம்பியப்படியே சாணியை கரைத்து கொண்டிருக்கும் நாராயணன் ஐயர் ஒன்றும் முற்போக்கு சிகாமணி கிடையாது. மாமுலான பிராமணாள் போன்றே மாட்டு மூத்திரத்தின் மீது தீராத ஈடுபாடு உண்டு அவருக்கு. யாராவது “ஏன் ஓய் மாட்டு மூத்திரத்தை போய் மடக்… மடக்குன்னு குடிக்கிறியே என்று கேட்டால் உடனே ஒரு காரணத்தை எடுத்துவிடுவார் நாரயணன். “அடேய் சுக்கு மாட்டு கோமியத்துல உள்ள அறிவியல் தெரியுமாடா நோக்கு” அடுத்த ஐந்து நிமிடத்தில் கேள்வி கேட்டவன்… ஓட்டம்தான்.. தினமும் வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் வயிற்றை சுத்தப்படுத்திவிடும் மற்றும் ஆஸ்துமாவை குணபடுத்தும் என்று இணையத்தில் எவன் சொல்வதையோ கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக தினமும் காலை கோமியம் குடித்து குடித்து இப்போழுது அதுவே பழகிவிட்டது நாரயணனுக்கு. அதிலும் நாரயணுக்கு தன் வீட்டு செண்பகத்தின் கோமியம் பிடிக்காது. அவள் பண்ணை மாடு தினமும் வைக்கோல் மட்டும் தான் உண்பாள். ஆனால் முனியன் வீட்டு கறுப்பி இருக்காளே அவளை போல் சத்தான கோமியம் ஆசிய கணடத்தில் எந்த மூலையிலும் கிடைக்காது அவள் ஊர் சுற்று உலா...

இந்திய சமுதாயத்தில் ரெத்தினம் ஒரு குற்றவாளி..!

சமுதாயம் என்னும் கட்டமைப்பையும் அதன் விதிமுறைகளையும் மீறியதால் இன்று சமுதாயத்தால் சுத்தமாய் ஒதுக்கப்பட்ட ஒரு மனுசி தான் எங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ரெத்தினம் பாட்டி 1930 களில் 8 வயதிலேயே 13 வயது ரெங்கனுக்கு மணமுடிக்கப்பட்டார் ரெத்தினம்.பெண்களின் இந்த மோசமான வாழ்க்கையை இன்னும் மோசமாக்கும் சங்கதி தான் திருமணம் என்பதை அறியாமல் அந்த கூத்து விளையாட்டில் அவரும் அங்கமாகிவிட்டார். பிறகு 15 வயதில் வயிற்றில் பிள்ளை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் எழுதபடாத அந்த திருமண அடிமை பெண் சட்டத்தின் கீழ் மாமூலான இந்திய பெண்கள் போல் இவரும் தனது வாழ்க்கையை நடத்தி வந்தார். மாட்டு வண்டி ஓட்டுபவர் ரெங்கன். ரெங்கனுக்கு மாடு மனைவி இருவருக்குமே உணர்ச்சி இருப்பதே நினைவில் இருப்பதில்லை. அவரின் முக்கிய சொந்தங்களில் தன் மனைவி ஒன்று என்றாலும் அந்த உறவை கையாள்வதற்கான தகுதி என்பது ரங்கனுக்கு வரவே இல்லை. ஒரு துணைவன் மீது உள்ள எந்த ஈர்ப்பும் ரெங்கன் மீது ரெத்தினத்திற்கு இல்லை. இந்நிலமையில் தான் ஒருநாள் தனது வீட்டிற்கு கூரை வேய வந்த வீரப்பன் மீது ரெத்தினத்திறகு காதல் உண்டானது. மூன்று குழந்தைகளை வைத்து கொண்டு இந்திய ...