இந்திக்கு இங்கே இடமில்லை அறிஞர் அண்ணா பக்கங்கள் 42 தமிழ்நாட்டில் திமுகவின் வருகையும், இந்தி எதிர்ப்பும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்த விஷயங்கள் 1938 ஆம் ஆண்டே நேரு இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் கொண்டு வர நினைத்தார். ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். அதற்கு பிறகு 1965 காலக்கட்டங்களில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பகிரங்கமாக இந்தியை இந்தியா முழுமைக்குமான பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து இந்தி திணிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய மாணவர் படை என்கிற அமைப்பு இந்தியை எதிர்த்து தமிழ்நாடு அளவில் போராட்டத்தை நிகழ்த்துகின்றன. அந்த சமயத்தில் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்தியை எதிர்த்து எழுதி வந்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அப்போது முதலமைச்சராக இருந்த பக்வசத்சலம் நிகழ்த்திய வன்முறையில் 200க்கும் அதிகமானோர் இறந்தனர். அதற்கு பிறகு இப்போது வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஜெயிக்கிறது. அண்ணா முதலமைச்சராகிறார். அவர் ச...