Skip to main content

Posts

Showing posts from 2026

பேய்ச்சி - ம.நவீன் புத்தக விமர்சனம்

  மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான் புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான் பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன். சமீபத்தில் நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன். நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன். ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம் நெருடலாக இருந்தது. ஆனால் எதிர்பார்த்ததுக்கு மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான். எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை பேய்ச்சி. ஆரம்பத்தில் வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர் சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க வருகிறார். அந்த பெண...

தீ பரவட்டும் - அறிஞர் அண்ணா

  தீ பரவட்டும் அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா தொடர்ந்து நிறைய முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனதில் பதித்தவர் என்பது பலருமே அறிந்த விஷயமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா மூவரிடமும் ஒற்றுமையாக உள்ள ஒரு விஷயம் என்றால் எதிர்ப்பு காட்டுவது என இறங்கிவிட்டால் பின் விளைவுகளை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அப்படியாக இந்து புராணங்களை பேசும் ராமாயணம், பெரிய புராணம் ஆகிய இரண்டு நூல்களை எரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துக்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் பிராமணிய கொள்கைகளை பரப்புவதாக இவை இருக்கின்றன என்பதே இவர் முன் வைக்கும் வாதமாக உள்ளது. அதற்காக அண்ணா ஆற்றிய உரைகள்தான் இந்த புத்தகம். ராமாயணத்தை பொறுத்தவரை அது தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான கருத்தை முன் வைக்கிறது. அப்படிப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்து அதை தமிழர்களிடமே விற்பனை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழில் எவ்வளவோ முக்கிய இலக்கியங்கள் இருக்கும்போது மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது ராமாயணத்தில் என்பது அவரது கருத்து, அதே போல பெரியபுரா...

வியாசனை அறிதல் - ஜெயமோகன்

  வியாசனை அறிதல் ஜெயமோகன் உலகம் முழுக்க இருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புராண கதைகள் என்று ஒன்று இருக்கும். அப்படியாக இந்தியாவில் முக்கியமான புராண கதையாக இருந்து வருவது மகாபாரதம். எப்படி இப்படி ஒரு கதையாடல் பல வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது என நினைக்கும் அளவிற்கு மனித உணர்ச்சிகள் மீது விளையாடும் ஒரு இலக்கியம். ஹாலிவுட்டில் வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையை விடவும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கும் மோசமான விளைவுகளை மகாபாரதம் வெளிச்சம் போட்டு காட்டும். மகாபாரதத்தை எழுதியவராக கருதப்படும் கிருஷ்ண துவைபாயனார் வியாசர் என்பவரை பற்றி ஜெயமோகனின் பார்வையில் இருந்து இந்த புத்தகம் செல்கிறது. என்னை பொறுத்தவரை மகாபாரதத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புராணமாகவும் தெய்வ கதையாகவும் மாற்றியதே அந்த கதை விரிவாக வரவேற்பை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது என நினைக்கிறேன். கௌரவன் புத்தகத்தை எழுதிய ஆனந்த் நீலகண்டன் அந்த புத்தகத்தில் கூறும்போதும் கூட மகாபாரதத்தை படிப்பவர்கள் அதில் பிழையென கண்டறியும் விஷயங்கள் அப்போது எழுதியவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். என்கிறார். இருந்தும் அவை அப்படியே எழு...

வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்

  வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார் வாழ்க்கை முழுக்க எதையோ தேடி எது எதுக்கோ ஓடின பிறகு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் நாம் ரசித்து வாழ்ந்தோமா என தெரியாது. வாழ்க்கையை ரசித்து அதனை வேடிக்கை பார்த்து வாழ தெரிந்தவர்கள் இப்பூவழகில் சொற்பமானவர்களே அப்படியானவர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமார் தன் கண்ணால் பார்த்த அனுபவித்த உலகை புத்தகத்தின் வழியாக நமக்கு தெரிவிக்கிறார். நா முத்துக்குமாரின் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள்தான் இந்த புத்தகம். நா முத்துக்குமார் கவிஞனாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவரின் தந்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர். தன் வருமானத்தில் அதிகமாக புத்தகங்கள் மட்டுமே வாங்கி வாழ்ந்து வந்தவர்தான் நா முத்துக்குமாரின் தந்தை. நா முத்துக்குமார் இப்படி ஒரு கவிஞனாக மாற காரணமாக இருந்தவர் அவரே. ஒரு சமயம் நா முத்துக்குமார் தன் தந்தையிடம் ஏன் நாம் ஓட்டு வீட்டில் இருக்கிறோம். இதனால் என் நண்பர்களை கூட என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை என கூறுவார். அதற்கு அவரது தந்தை நீ உன் நண்பர்களை இரவு வேளையில் அழைத்து வா நம் வீட்டில் வீட்டுக்குள் ...

பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்)

  பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்) ஆர்தர் கோனான் டாயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு டிடெக்டிவ் நாவல் கதாபாத்திரம். இவருக்கு நான் இண்ட்ரோ கொடுக்க தேவையில்லை. உலகம் முழுவதும் இப்போது வரும் துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு துப்பறியும் கதைகளுக்கு ஒரு இலக்கணமாக ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹொம்ஸ் உள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வந்த பிறகு அவர் உண்மையிலேயே லண்டனில் இருக்கிறார் என்பதாக பலரும் நம்ப துவங்கினர். பிறகு பேக்கர்ஸ் தெருவில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு அவர்கள் கடிதங்களை எழுத துவங்கினர். உண்மையில்   அப்படி ஒரு முகவரியே அப்போது இல்லை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் பொஹிமியாவில் ஒர் அவதூறு, அடையாளம் குறித்த வழக்கு, செந்தலையர் சங்கம் ஆகிய மூன்று கதைகள் உள்ளன. மூன்றுமே சுவாரசியமான கதைகள். ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் உள்ள மிகப்பெரிய ட்ரிக் என்னவென்றால் அவரது நண்பரான வாட்சனின் பார்வையின் வழிதான...

புதிய வரலாறு - அறிஞர் அண்ணா

  பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது. இப்போது விஜய்யை எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ் திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய புத்தகம்தான் இந்த புதிய வரலாறு. ஏதோ இளைஞர்கள் எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள். துரைமுருகன், வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்த...

புளிக்க வைத்த அப்பம் - Book Review

  வன்முறை யார் மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம் உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1. தன் தேசத்தில் யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். உலகம் முழுக்க உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன் பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல் இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர். இவளும் இப்படிதான் வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள ப...

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

சாம்பலின் சங்கீதம் - Graphic Novel

  சாம்பலின் சங்கீதம் கிராபிக் நாவல் மொத்த மனிதக்குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்த கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று அணுகுண்டு. இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் திரும்ப உலகப்போரே உருவாகாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்த ஒரு கண்டுப்பிடிப்பு. அணுக்கரு குறித்த சோதனை என்பது பல நூற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் அறிவியலில் தியரியாக கூறப்படும் தத்துவங்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். இதுல எப்படினே லைட் எறியும் என்பதாகதான் அவர்களுக்கு இருக்கும். ஆனால் ராஜ ராஜ சோழனிடம் சென்று இண்டர்நெட் என்று ஒன்று எதிர்காலத்தில் வரும் அதில் உலகில் உள்ள எல்லா தரவுகளும் கிடைக்கும். ஆனாலும் பெரும்பாலானோர் கேலிக்கைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவர் என கூறினால் அவர் நமக்கு மண்ட கோளாறு என்றே நினைப்பார். அணுவை பிளப்பதன் மூலம் பெரும் ஆற்றல் வெளிப்படும் என்பதும் ஆரம்பத்தில் அப்படியான விஷயமாகதான் பார்க்கப்பட்டது. இந்த புத்தகம் அணுகுண்டு குறித்த யோசனை உருவானதில் துவங்கி ஹிரோஷிமாவில் அமெரிக்கா குண்டு போட்டவரை அரசியல் ரீதியாகவும், அ...

அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா

  அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா தொகுத்தவர்: ஜே.எம் சாலி எம்.ஏ பொதுவாக இஸ்லாம் குறித்த கண்ணோட்டம் என்பது பொது புத்தியில் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திரைப்படங்களில் துவங்கி பொதுவாகவே இஸ்லாமியர் என்றால் மோசமானவர் என்கிற பிம்பமே. அதற்கு தகுந்தாற் போல இஸ்லாத்தை வைத்து கடுமையான சட்டங்களை போடும் பிற்போக்குதனமான சட்டங்கள் இட்டுள்ள நாடுகளையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த மதம் அவர்களுக்கு எதை போதிக்கிறது எனும்போது இஸ்லாத்து அன்பைதான் போதிக்கிறது. அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லை என்பதாக சில இஸ்லாமிய நண்பர்களே கூற கேட்டுள்ளேன். நபிகள் இஸ்லாத்தில் என்ன போதிக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அண்ணா பேசியுள்ள உரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாடை நபிகளிடம் இருந்துதான் எடுக்கிறார். அல்லாஹ் ஒருவனே தேவன் என்கிற நபியின் கோட்பாடு ஒரு புரட்சி என்கிறார் அண்ணா. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசத்தில் அல்லாஹ் முக்கிய தெய்வமாக இருந்தாலும் கூட பல்வேறு உருவங்களை கடவுள்களாக வணங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300க்கு...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

உணவு சரித்திரம்

  உணவு சரித்திரம் ஆசிரியர்: முகில் வரலாற்று நிகழ்வுகளை சுறுசுறுப்பாக படிப்பதற்கு எளிமையாக எழுதக்கூடிய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் முகில். வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மூலமாக முகில் புத்தகம் மீது ஆர்வம் உண்டானது. அடுத்து இப்போது படித்த புத்தகம் உணவு சரித்திரம் தக்காளி, வெங்காயம் மிளகாயில் துவங்கி இன்னும் எத்தனையோ உணவு பொருட்கள் காலம் காலமாக நம் பூமியில் விளைகின்றன என்றுதான் நானும் கூட பல காலங்களாக நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பது சில மாதங்களுக்கு முன்பு ராய் மார்க்ஸம் எழுதிய அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா புத்தகத்தை படித்தப்போது தெரிந்தது. அதில் கொஞ்சமாக இது பற்றிய விஷயங்கள் இருந்தன. தற்சமயம் முகில் புத்தகம் முழுக்க முழுக்கவே உணவுகளின் வரலாற்றை கொண்டதாக உள்ளது, உண்மையில் பக்கத்துக்கு பக்கம் வியப்புகளை அளிக்க கூடிய ஒரு புத்தகம் என்றுதான் கூற வேண்டும். எப்போதும் விடை தெரியாத சின்ன சின்ன சந்தேகங்களுக்கு நாமே ஒரு விடையை உருவாக்கி கொள்வோம். அப்படியாக இவ்வளவு நாளாக ஏதோ மரத்தில் வழியும் பிசின் தான் பெருங்காயம் என்றுதான் நான் நினைத்து வந்தேன். அதுவே...

இந்திக்கு இங்கே இடமில்லை - அறிஞர் அண்ணா

  இந்திக்கு இங்கே இடமில்லை அறிஞர் அண்ணா பக்கங்கள் 42   தமிழ்நாட்டில் திமுகவின் வருகையும், இந்தி எதிர்ப்பும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்த விஷயங்கள் 1938 ஆம் ஆண்டே நேரு இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் கொண்டு வர நினைத்தார். ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். அதற்கு பிறகு 1965 காலக்கட்டங்களில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பகிரங்கமாக இந்தியை இந்தியா முழுமைக்குமான பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து இந்தி திணிக்கப்படுகிறது. இந்நிலையில் தேசிய மாணவர் படை என்கிற அமைப்பு இந்தியை எதிர்த்து தமிழ்நாடு அளவில் போராட்டத்தை நிகழ்த்துகின்றன. அந்த சமயத்தில் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்தியை எதிர்த்து எழுதி வந்தவர்கள் அண்ணாவும் கருணாநிதியும். அப்போது முதலமைச்சராக இருந்த பக்வசத்சலம் நிகழ்த்திய வன்முறையில் 200க்கும் அதிகமானோர் இறந்தனர். அதற்கு பிறகு இப்போது வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ் தோற்று திமுக ஜெயிக்கிறது. அண்ணா முதலமைச்சராகிறார். அவர் ச...

குமஸ்தாவின் பெண் - அறிஞர் அண்ணா

குமஸ்தாவின் பெண் அறிஞர் அண்ணா ஆண்கள் பெண்ணியம் பேசுறதுங்குறது பூனை எலிக்கு பரிந்து பேசுற மாதிரினு பெரியார் சொன்னதா சொல்லுவாங்க. அவர் சொன்னாரா இல்லையானு தெரியலை. ஆனால் இந்த புத்தகத்தை அண்ணா எழுதியிருந்த விதம் அப்படிதான் இருந்தது. தமிழ் சினிமாவிலும் சரி இலக்கியவாதிகள் இடத்திலும் சரி கற்பு தவறிய பெண்ணின் எண்ட் கார்டு என்பது அழுகாச்சியாகதான் முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி. ஏற்கனவே செம்மீன் நாவலில் தகழி சிவசங்கரபிள்ளையும் இதே வேலையைதான் பார்த்து வைத்திருப்பார். ஒரு பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணத்திற்கு பிறகு உறவு என செல்லும்போது அதிலும் குமஸ்தாவின் மகளிடம் எந்த ஒரு தவறுமே காணப்படவில்லை. தனது கணவனுக்கு துரோகம் கூட செய்யாத ஒரு கதாபாத்திரம் என்றுதான் கூற வேண்டும். வயதான நபருடன் திருமணம் ஆனாலும் கூட அவர் இறந்த பிறகுதான் அவள் பணக்காரர் ஒருவருடன் உறவில் செல்கிறார். அதுவும் அவருக்கு வைப்பாட்டியாக இருப்பதன் மூலம் குடும்பத்தின் ஏழ்மையை சரி செய்ய முடியும் என்கிற நோக்கத்திற்காகவே செல்கிறாள். பிறகு அந்த பணக்கார வாழ்க்கை அவளுக்கு பிடித்து மோசமானவளாக மாறுகிறாள் குமஸ்தாவின் மகள். இந்த இடத்தில்த...