ஆதிக்காலம் முதலே மனித உயிரை மருத்துவம் எப்படி காத்ததோ அதே அளவு ஆயுதங்களும் மனித உயிரை காப்பாற்றியுள்ளது. மிருகங்களிடம் இருந்து தன்னை காத்துக்கொள்ள ஆயுதம் பேருதவியாக இருந்தது. கற்காலத்தில் தொடங்கிய இந்த ஆயுத கலாச்சாரம் மேன் மேலும் விரிவடைந்து தற்சமயம் துப்பாக்கி, வெடிக்குண்டு, பீரங்கி என வளர்ந்துள்ளது. ஆயுதம் உருவானதற்கான நோக்கம் என்னவோ பாதுக்காப்பிற்க்காக தான் இருந்தது. ஆனால் தற்சமயம் அது பழி வாங்குவதற்கும் வன்முறையை வளர்க்கவும் மிக பெரும் பங்கு ஆற்றி வருகிறது. இப்படியாக கற்களில் ஆரம்பித்த இந்த ஆயுத கலாச்சாரம் உலோகங்களாக மாறிய போதே வாள்களும்,ஈட்டிகளும் மிருகங்களுக்கு பதில் மனிதனை பதம் பார்க்க தொடங்கின. போருக்கும் நில ஆதிக்கத்துக்கும் மிகவும் உதவின. ஆனால் எப்போது வெடி மருந்து கண்டுபிடிக்கப்பட்டதோ அன்று மனித இனத்தின் வீழ்ச்சி ஆரம்பமானது. மனித வலிமை , நாட்டின் வலிமை என்பது ஆயுதங்களை கொண்டு தீர்மானிக்கப்பட்டது. நில கையகபடுத்துவதற்கு துப்பாக்கியை போன்றதொரு துணைவன் மிகவும் உதவியாக இருந்தது. செவ்விந்தியர்களையும் கறுப்பின மக்களையும் கொன்று குவித்த அமெரிக்கர்களின் துப்...