Skip to main content

Posts

Showing posts from April, 2026

புளிக்க வைத்த அப்பம் - Book Review

  வன்முறை யார் மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில் பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம் உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில் ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1. தன் தேசத்தில் யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது என்றால் மிகவும் பிடிக்கும். உலகம் முழுக்க உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன் பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல் இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர். இவளும் இப்படிதான் வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள ப...

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

சாம்பலின் சங்கீதம் - Graphic Novel

  சாம்பலின் சங்கீதம் கிராபிக் நாவல் மொத்த மனிதக்குலத்துக்கும் அச்சுறுத்தலாக இருந்த கண்டுப்பிடிப்புகளில் மிக முக்கியமான ஒன்று அணுகுண்டு. இரண்டாம் உலகப்போரில் மிகப்பெரிய அழிவு ஏற்பட்டதற்கும் திரும்ப உலகப்போரே உருவாகாமல் இருப்பதற்கும் காரணமாக அமைந்த ஒரு கண்டுப்பிடிப்பு. அணுக்கரு குறித்த சோதனை என்பது பல நூற்றாண்டுகளாகவே நடந்துக்கொண்டுதான் இருக்கிறது. எப்போதும் அறிவியலில் தியரியாக கூறப்படும் தத்துவங்களை வெளியில் இருந்து கேட்பவர்களுக்கு நகைச்சுவையாகவே இருக்கும். இதுல எப்படினே லைட் எறியும் என்பதாகதான் அவர்களுக்கு இருக்கும். ஆனால் ராஜ ராஜ சோழனிடம் சென்று இண்டர்நெட் என்று ஒன்று எதிர்காலத்தில் வரும் அதில் உலகில் உள்ள எல்லா தரவுகளும் கிடைக்கும். ஆனாலும் பெரும்பாலானோர் கேலிக்கைக்கு மட்டுமே அதை பயன்படுத்துவர் என கூறினால் அவர் நமக்கு மண்ட கோளாறு என்றே நினைப்பார். அணுவை பிளப்பதன் மூலம் பெரும் ஆற்றல் வெளிப்படும் என்பதும் ஆரம்பத்தில் அப்படியான விஷயமாகதான் பார்க்கப்பட்டது. இந்த புத்தகம் அணுகுண்டு குறித்த யோசனை உருவானதில் துவங்கி ஹிரோஷிமாவில் அமெரிக்கா குண்டு போட்டவரை அரசியல் ரீதியாகவும், அ...