பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது. இப்போது விஜய்யை எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ் திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய புத்தகம்தான் இந்த புதிய வரலாறு. ஏதோ இளைஞர்கள் எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள். துரைமுருகன், வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்த...