Skip to main content

Posts

Showing posts from December, 2025

தாத்தா சொன்ன கதைகள் - கி.ராஜநாராயணன்

  தாத்தா சொன்ன கதைகள் கி.ராஜநாராயணன் பக்கங்கள்: 260 இலக்கிய வட்டாரத்தில் நாவல் கதைகள் படிப்பதெல்லாம் பிரயோஜனமற்ற விஷயம் என நினைக்கும் நபர்களை நான் பார்த்திருக்கிறேன். ஆனால் இவர்கள் படிக்கும் வரலாறுகளுக்கு முன்பே கதைகள் உருவாகிவிட்டன. மனித நாகரிகத்தில் எழுதக்கூடிய சான்றோர்கள் பெரிதாக இல்லாத சமயங்களிலேயே வரலாறுகள் கதைகளின் வழியாகதான் பரவி வந்தன. வழிப்போக்கர்கள், வணிகர்கள் சொன்ன கதைகள்தான் மக்கள் தாங்கள் பார்க்காத உலகை கதைகளின் வழியே பார்க்க உதவின என கூறலாம். கதைகள் அதிக முக்கியமானவை. இந்தியா மீது அலெக்சாண்டர், முகலாயர்கள், போர்ச்சுக்கீசியர்கள், ஆங்கிலேயர்கள் என பலரும் படையெடுக்க காரணமாக இருந்தவை கதைகளே. இந்தியா குறித்த செவி வழி கதைகளே அதை பற்றிய பிரமாண்டமான தோற்றத்தை உண்டாக்கியது. இந்த மாதிரியான கதைகளில் ஆசிரியர் என்று யாரும் கிடையாது. கதையை சொல்லக்கூடிய ஒவ்வொரு நபரும் சுவாரஸ்யத்திற்காக எதையாவது கூட்டியோ குறைத்தோ கதையை மாற்றி அமைத்து சொல்ல முடியும். அவை முழுக்க உண்மை என கூற முடியாது. ஆனால் கதைகள் சமக்கால வரலாறுகளை தன்னுள் சுமந்து கொண்டுள்ளது. எனவேதான் நாட்டுப்புற கதைகளுக்கு எப்போதுமே...

காதுகள் Book Review

  காதுகள் எம்.வி வெங்கட்ராம் 160 பக்கங்கள் நம்முடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் புலன்களின் மீது கொண்டுள்ள நம்பகத்தன்மையை அடிப்படையாக கொண்டுதான் சென்று கொண்டுள்ளன. ஒருவேளை மற்றவர்களுக்கு பச்சை நிறத்தில் தெரியும் விஷயங்கள் நமக்கு நீல நிறமாகவும், நீல நிறமானது பச்சை நிறமாகவும் தெரிந்தால் இறுதி வரை நாம் பச்சை நிறத்தை நீல நிறமென்றே நம்பி கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருப்போம். எத்தனை பேர் அப்படி வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதும் தெரியவில்லை. 😁. இந்த நிலையில் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களை தொடர்ந்து நாம் பிரச்சனையாக பார்த்து வருகிறோம். ஆனால் உடல் உறுப்புகளே செய்யும் பிரச்சனைகளை அடிப்படையாக கொண்டு உருவான ஒரு கதைதான் காதுகள். அறிவியல் மற்றும் மாந்தீரிகம் என இரு வகையிலுமே கதையின் போக்கு அமைந்துள்ளது. நல்ல ஒரு குடும்பத்தில் நல்ல நிலையில் இருக்கும் கதாநாயகனுக்கு திடீரென ஒரு நாள் காதுகளில் தாமாகவே யாரோ உரையாடி கொண்டிருப்பது போல தோன்றுகிறது. அதனை தொடர்ந்து அந்த பிரச்சனை கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்க அவரால் எதிலுமே நாட்டம் காட்ட முடியாமல் போகிறது. குடும்பமே பெரும் வறுமைக்குள் செல்கிறது. யாருமே பார்க்க முடியா...

குருதியில் பூத்த குறிஞ்சி மலர் Comics Review

  குருதியில் பூத்த குறிஞ்சி மலர். காமிக்ஸ் பக்கங்கள்: 66 எல்லா காலங்களிலும் நாகரிகத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் நாகரிக குடிகள் என்று தங்களை பறைசாற்றி கொள்ளும் விவசாய குடிகள் பல பழங்குடிகளை அழித்துதான் தங்கள் நாகரிகத்தை வளர்த்துள்ளது. இந்திய மலைவாழ் மக்கள், சீனத்தில் மங்கோலியர்கள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என இந்த லிஸ்ட் மொத்த உலகத்தையும் ஒரு சுத்து சுத்தி வரும். ஆனால் இதற்கெல்லாம் ஆதி இந்த இன வெறி மட்டுமே. அமெரிக்கர்களும் சரி அவர்களுக்கு முன்பு அமெரிக்காவை ஆக்கிரமிப்பில் வைத்திருந்த பிரிட்டிஷாரும் சரி. வெகு காலங்களாகவே செவ்விந்தியர்களை மிக மோசமாகவே நடத்தி வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே செவ்விந்தியர்கள் வெள்ளையர்களுக்கு அடங்கி போகவில்லை. மேலும் செவ்விந்தியர்கள் காட்டு மக்களாக இருப்பதாலும், இங்கிலாந்து காரர்களுக்கு உலகிலேயே தான் மட்டுமே தூய்மையான இனம் என்கிற பம்மாத்தும் இருக்கிறதால் அவர்கள் செவ்விந்திய கிராமங்களை எரிப்பது செவ்விந்திய பெண்களை நாசம் செய்வது போன்றவற்றை பொழுது போக்காகவே செய்து வந்தனர். உலகிலேயே அதிகப்படியான காட்டுமிராண்டி தனங்களை செய்தப்போதும் இன்னமும் தா...

ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு - Book Review

  ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு ஹரிஹரசுதன் தங்கவேலு பக்கங்கள்: 191 கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏ.ஐயின் வளர்ச்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்கள் சில மணி நேரங்களில் செய்யும் அறிவு சார்ந்த நிறைய வேலைகளை ஏ.ஐ சில நிமிடங்களில் செய்ய துவங்கியது முதலே ஏ.ஐ மீது மனிதர்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்பது அதிகரிக்க துவங்கியது. நிறைய டெவலப்பர்களே கூட ஏ.ஐ மனிதர்களின் ப்ரோகிராம் என்பதை மறந்து மனிதனுக்கு போட்டியாகவும் ஏதோ உயிருள்ள ஜீவராசி போலவும் அதை நினைக்க துவங்கியுள்ளனர். எவ்வளவிற்கு ஏ.ஐ யில் நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் தீமைகளும் உண்டு. எல்லா விஷயத்திலுமே உலகில் நன்மை என இருந்தால் தீமையும் இருக்கும். தீமையிலும் சில நன்மைகள் இருக்கும். அந்த வகையில் ஏ.ஐ வளர்ச்சியில் டீப் ஃபேக் மாதிரியான பல விஷயங்கள் மக்களுக்கு என்னவென்று கூட விளங்குவதில்லை. மேலும் அது பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இப்படியான நிலையில் ஏ.ஐ குறித்து அவர்களுக்கு குறைந்த பட்ச அறிவையாவது கொடுப்பதன் மூலம் அவர்களை இந்த மாதிரியான மோசமான விளைவுகளில் இருந்து காப்பாற்ற உதவும். தமிழில் தொழில்நுட்பம் சார்ந்தே குற...