Skip to main content

Posts

Showing posts from October, 2019

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாராயணன் - 3 இறுதி பாகம்

நிலைமை மிகவும் மோசமாகி கொண்டிருந்தது நாராயணனின் உருவம் மெல்ல தெரிய தொடங்கியது. ஆனால் அதை எண்ணி மகிழ்ச்சி அடையும் தருவாயில் தற்சமயம் அவர் இல்லை. கடைவீதி வழக்கத்தை விட மிகவும் கூட்டமாக இருந்தது. கலகலப்பான கடைத்தெருவை பார்ப்பதே நாரயணனுக்கு அலாதி பிரியமாக இருக்கும். ஆனால் அதை அனுபவிக்க அவர் என்ன இப்போது கணவான்கள் போன்று ஆடையணிந்தா உள்ளார். தற்சமயம் உள்ள நிலைக்கு அவர் தெரு நாய்களிடம் சிக்கினாலே தன் எடையில் ஐந்து கிலோவாவது இழந்துவிடுவது உறுதி. உடலில் வியர்வை ஆறாக ஓட நாராயணன் தன் வயதுக்கு மீறிய வேகத்துடன் ஓட்டம் பிடித்தார். வீட்டு வாசலில் வந்து நின்ற போது பாதி உருவம் தெரிய ஆரம்பித்தது. நேராக குளியலறைக்கு சென்றார். குளித்துவிட்டு துண்டை எடுத்து கட்டிக்கொண்டு வெளியே வருகையில் வள்ளி கையில் அவரது துணிகளோடு நின்று கொண்டிருந்தார். “ஏங்க அங்க ஏன் துணிய கழட்டி போட்டுட்டு வந்தேள்.” ஒன்றும் புரியாமல் வள்ளி கேட்க “வள்ளி இன்னிக்கு உடம்பு சுகப்படலடீ நான் இன்னிக்கு ஆபிஸ் போகல” என்று கூறி விஷயத்தை திசை திருப்பினார் நாராயணன் . இந்தாளுக்கு வேற வேலை இல்ல என்று நினைத்துக்கொண்டு வள்ளி நடையை கட்ட ஆழ்ந்த யோ...