Skip to main content

Posts

Showing posts from June, 2026

தீ பரவட்டும் - அறிஞர் அண்ணா

  தீ பரவட்டும் அறிஞர் அண்ணா அறிஞர் அண்ணா தொடர்ந்து நிறைய முற்போக்கு சிந்தனைகளை மக்கள் மனதில் பதித்தவர் என்பது பலருமே அறிந்த விஷயமே. அம்பேத்கர், பெரியார், அண்ணா மூவரிடமும் ஒற்றுமையாக உள்ள ஒரு விஷயம் என்றால் எதிர்ப்பு காட்டுவது என இறங்கிவிட்டால் பின் விளைவுகளை பற்றியெல்லாம் யோசிக்க மாட்டார்கள். அப்படியாக இந்து புராணங்களை பேசும் ராமாயணம், பெரிய புராணம் ஆகிய இரண்டு நூல்களை எரிக்க வேண்டும் என்பதே அவரது கருத்தாக இருக்கிறது. இந்த இரண்டுமே மக்களின் வாழ்வுக்கு ஒவ்வாத கருத்துக்களை கொண்டுள்ளன. பெரும்பாலும் பிராமணிய கொள்கைகளை பரப்புவதாக இவை இருக்கின்றன என்பதே இவர் முன் வைக்கும் வாதமாக உள்ளது. அதற்காக அண்ணா ஆற்றிய உரைகள்தான் இந்த புத்தகம். ராமாயணத்தை பொறுத்தவரை அது தமிழ் மக்கள் குறித்து தரக்குறைவான கருத்தை முன் வைக்கிறது. அப்படிப்பட்ட நூலை தமிழில் மொழி பெயர்த்து அதை தமிழர்களிடமே விற்பனை செய்வதில் என்ன நியாயம் இருக்கிறது. தமிழில் எவ்வளவோ முக்கிய இலக்கியங்கள் இருக்கும்போது மொழிப்பெயர்த்து மக்களுக்கு வழங்கும் அளவிற்கு என்ன இருக்கிறது ராமாயணத்தில் என்பது அவரது கருத்து, அதே போல பெரியபுரா...

வியாசனை அறிதல் - ஜெயமோகன்

  வியாசனை அறிதல் ஜெயமோகன் உலகம் முழுக்க இருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புராண கதைகள் என்று ஒன்று இருக்கும். அப்படியாக இந்தியாவில் முக்கியமான புராண கதையாக இருந்து வருவது மகாபாரதம். எப்படி இப்படி ஒரு கதையாடல் பல வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது என நினைக்கும் அளவிற்கு மனித உணர்ச்சிகள் மீது விளையாடும் ஒரு இலக்கியம். ஹாலிவுட்டில் வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையை விடவும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கும் மோசமான விளைவுகளை மகாபாரதம் வெளிச்சம் போட்டு காட்டும். மகாபாரதத்தை எழுதியவராக கருதப்படும் கிருஷ்ண துவைபாயனார் வியாசர் என்பவரை பற்றி ஜெயமோகனின் பார்வையில் இருந்து இந்த புத்தகம் செல்கிறது. என்னை பொறுத்தவரை மகாபாரதத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புராணமாகவும் தெய்வ கதையாகவும் மாற்றியதே அந்த கதை விரிவாக வரவேற்பை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது என நினைக்கிறேன். கௌரவன் புத்தகத்தை எழுதிய ஆனந்த் நீலகண்டன் அந்த புத்தகத்தில் கூறும்போதும் கூட மகாபாரதத்தை படிப்பவர்கள் அதில் பிழையென கண்டறியும் விஷயங்கள் அப்போது எழுதியவர்களுக்கு தெரியாமலா இருந்திருக்கும். என்கிறார். இருந்தும் அவை அப்படியே எழு...

வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்

  வேடிக்கை பார்ப்பவன் நா.முத்துக்குமார் வாழ்க்கை முழுக்க எதையோ தேடி எது எதுக்கோ ஓடின பிறகு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் நாம் ரசித்து வாழ்ந்தோமா என தெரியாது. வாழ்க்கையை ரசித்து அதனை வேடிக்கை பார்த்து வாழ தெரிந்தவர்கள் இப்பூவழகில் சொற்பமானவர்களே அப்படியானவர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமார் தன் கண்ணால் பார்த்த அனுபவித்த உலகை புத்தகத்தின் வழியாக நமக்கு தெரிவிக்கிறார். நா முத்துக்குமாரின் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள்தான் இந்த புத்தகம். நா முத்துக்குமார் கவிஞனாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவரின் தந்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர். தன் வருமானத்தில் அதிகமாக புத்தகங்கள் மட்டுமே வாங்கி வாழ்ந்து வந்தவர்தான் நா முத்துக்குமாரின் தந்தை. நா முத்துக்குமார் இப்படி ஒரு கவிஞனாக மாற காரணமாக இருந்தவர் அவரே. ஒரு சமயம் நா முத்துக்குமார் தன் தந்தையிடம் ஏன் நாம் ஓட்டு வீட்டில் இருக்கிறோம். இதனால் என் நண்பர்களை கூட என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை என கூறுவார். அதற்கு அவரது தந்தை நீ உன் நண்பர்களை இரவு வேளையில் அழைத்து வா நம் வீட்டில் வீட்டுக்குள் ...

பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்)

  பொஹிமியாவில் ஒரு அவதூறு (ஷெர்லாக் ஹோம்ஸ் சிறுகதைகள்) ஆர்தர் கோனான் டாயில் உலகம் முழுவதும் பிரசித்தி பெற்ற ஒரு டிடெக்டிவ் நாவல் கதாபாத்திரம். இவருக்கு நான் இண்ட்ரோ கொடுக்க தேவையில்லை. உலகம் முழுவதும் இப்போது வரும் துப்பறியும் கதைகளில் ஷெர்லாக் ஹோம்ஸ் கதையின் தாக்கம் இல்லாமல் இருக்காது. அந்த அளவிற்கு துப்பறியும் கதைகளுக்கு ஒரு இலக்கணமாக ஆர்தர் கோனான் டாயிலின் ஷெர்லாக் ஹொம்ஸ் உள்ளது. ஷெர்லாக் ஹோம்ஸ் கதைகள் வந்த பிறகு அவர் உண்மையிலேயே லண்டனில் இருக்கிறார் என்பதாக பலரும் நம்ப துவங்கினர். பிறகு பேக்கர்ஸ் தெருவில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸ்க்கு அவர்கள் கடிதங்களை எழுத துவங்கினர். உண்மையில்   அப்படி ஒரு முகவரியே அப்போது இல்லை. அந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு கதாபாத்திரம்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இந்த சிறுகதை தொகுப்பை பொறுத்தவரை ஷெர்லாக் ஹோம்ஸ் துப்பறியும் பொஹிமியாவில் ஒர் அவதூறு, அடையாளம் குறித்த வழக்கு, செந்தலையர் சங்கம் ஆகிய மூன்று கதைகள் உள்ளன. மூன்றுமே சுவாரசியமான கதைகள். ஷெர்லாக் ஹோம்ஸ் கதையில் உள்ள மிகப்பெரிய ட்ரிக் என்னவென்றால் அவரது நண்பரான வாட்சனின் பார்வையின் வழிதான...