Skip to main content

Posts

Showing posts from March, 2025

வீரயுக நாயகன் வேள்பாரி - பாகம் 2

  வீரயுக நாயகன் வேள்பாரி -  பாகம் 2 ஆசிரியர்: சு.வெங்கடேசன் பக்கங்கள்: 800 தமிழ் இலக்கியங்களில் பெரும்பாலும் புகழப்படுபவர்களாக கடவுள்கள், அரசர்கள் மற்றும் பெருங்குடியை சேர்ந்தவர்கள்தான் இருப்பார்கள். மிக அரிதாக இவர்கள் அல்லாத மனிதர்கள் சிலரும் இடம் பெற்றுள்ளனர். அப்படியான நபர்களில் பாரி முக்கியமானவர். பொதுவாகவே பழங்குடி இன மக்கள், வேடர், குறவர் போன்றவர்கள் நாகரீக சமூகங்களுக்கு முகம் சுளிக்க வைக்கும் ஒரு மனித கூட்டமாகவே தெரிவார்கள். ஆனால் அதே சமயம் தொன்ம பழக்க வழக்கங்கள் பலவற்றையும் அழியாமல் பாதுகாத்து வருபவர்களாகவும் இந்த பழங்குடிகள் இருந்து வருகின்றனர். பெரும்பாலும் மலையில் வாழ்பவர்களும், அடர் காடுகளில் வாழ்பவர்களுமே பழங்குடிகளாக இருந்துள்ளனர். அதற்கு காரணம் அவர்களுக்கு தேவையான அனைத்துமே மலையில் கிடைத்துவிடுவதால் அவர்கள் சமதள நிலம் பக்கம் வருவதே இல்லை. இதனால் சமதள நிலம் வெகு சீக்கிரத்தில் அடைந்த நாகரீக முன்னேற்றத்தை பழங்குடிகளால் அடைய முடியவில்லை. இந்த சமதள மக்கள் அவர்களை கண்டுக்கொள்ளவில்லை என்றே கூறலாம். மலை வாழ் மக்களை சம தள மக்கள் நாகரீகமற்றவர்களாகவும், காட்டு மனிதர்களாகவு...