Skip to main content

Posts

Showing posts from June, 2025

காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் வில்லர்

காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் - டெக்ஸ் வில்லர்  Page: 226 காட்டேரியின் சாம்ராஜ்யத்தில் ஒரு மர்ம காமிக்ஸ் என கூறலாம். அரிசோனாவில் குறிப்பிட்ட பகுதியில் மர்மமான ஒரு விஷயம் நடக்கிறது. அங்கு செல்லும் விலங்குகள் எல்லாம் மர்மமான முறையில் இறக்கின்றன. ஒரு விலங்கு இறந்து அது எலும்பு கூடாக சில நாட்கள் தேவைப்படும்.  ஆனால் அந்த பிராந்தியத்தில் வித்தியாசமாக இறக்கும் விலங்குகள் உடலில் இருந்து மொத்த ரத்தமும் உறிஞ்சப்பட்டு கூடு மட்டும் கிடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாக வழிப்போக்கர்களும் இதே மாதிரி இறக்கிறார்கள். இது இரத்த காட்டேறியின் வேலை என அங்கிருக்கும் மக்கள் முடிவு செய்கின்றனர். எனவே அங்கிருக்கும் மோரிஸ்கோ என்னும் மந்திரவாதியிடம் இந்த பிரச்சனையை கொண்டு வருகின்றனர். இதற்கு நடுவே டெக்ஸ் வில்லரும் அவரது குழுவினரும் ஒரு கொள்ளை கூட்டத்தை தேடி அதே இடத்திற்கு வருகின்றனர். அங்கு உலாவும் மர்மத்தை அவர்கள் கண்டுப்பிடிப்பதுதான் கதை. ஆரம்பத்தில் மர்மமாக சென்றாலும் பிறகு அறிவியல் பூர்வமான கதையாக மாறிவிடுகிறது இந்த கதை.

ஸாகோர் - சிகப்பு நதி

  ஸாகோர் - சிகப்பு நதி  Page - 130 சிகப்பு நதி கதை ஊர்களில் சுற்றி திரியும் கட்டுக்கதைகளை அடிப்படையாக கொண்டதாக இருக்கிறது. சூரிய மறைவின்போது இரத்த நிறத்திற்கு மாறும் ஒரு சிகப்பு குளம் இருக்கிறது. அந்த குளத்தின் பக்கம் செல்லும் வேட்டையர்கள் மர்மமான முறையில் ஒரு அம்பால் கொல்லப்படுகின்றனர். ஆரம்பத்தில் அந்த குளத்தை சுற்றியுள்ள பகுதி செவ்விந்தியர்களின் ஆதிக்கத்தில் இருந்துள்ளது. ஆனால் வெள்ளையர்கள் அத்துமீறி உள்ளே வந்து அந்த இடத்தை ஆக்கிரமிக்கின்றனர். அப்போது அப்பாவியான ஒரு செவ்விந்தியன் வெள்ளையனால் மூர்க்கமாக தாக்கப்பட்டு சாகிறான். அவன் இறக்கும்போது வெள்ளையர்களை மொத்தமாக பழி வாங்குவதாக சபதம் எடுக்கிறான். அவனது ஆவிதான் வேட்டையர்களை பழி வாங்குவதாக ஊரில் பேச்சுக்கள் சென்றுக்கொண்டுள்ளன. இந்த சமயத்தில்தான் கதாநாயகன் ஸாகோர் அந்த ஊருக்குள் வருகிறார். அந்த குளத்தின் மர்மத்தை அவர் கண்டறிவதை வைத்து கதை செல்கிறது. எதிர்பார்க்காத ட்விஸ்ட்டில் கதை முடிகிறது. ஆனால் கதை வெள்ளையர்களின் பேராசையை வெட்ட வெளிச்சம் ஆக்கும் வகையிலேயே அமைந்துள்ளது.

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ்

நாளை போய் நேற்று வா - காமிக்ஸ் page:65 நாளை போய் நேற்று வா ஒரு டைம் ட்ராவல் காமிக்ஸ் ஆகும். டைம் ட்ராவலை பொறுத்தவரை அதில் பல விதமான தியரிகள் உண்டு. பேக் டு தி ஃப்யூச்சர் மாதிரி கடந்த காலத்திற்கு சென்று தவறுகளை சரி செய்வதன் மூலம் எதிர்காலம் மாறும் என்பது ஒரு ரகம். ஆனால் கடந்த காலத்தில் எதையுமே நம்மால் மாற்ற முடியாது என கூறும் திரைப்படங்களும் உண்டு. ட்ரைம் ட்ராவலர் வைஃப் என்கிற திரைப்படம் அந்த மாதிரியான கதைக்களத்தை கொண்டது. அதே மாதிரி மாநாடு மாதிரி நடந்ததே திரும்ப நடக்கும் டைம் லூப் கதைகளங்களும் உண்டு. இதில் இந்த காமிக்ஸ் வேறு வகையான டைம் ட்ராவல் ஸ்டோரி என்று கூற வேண்டும். கதையின்படி ஒரு பெண் போலீஸ் அதிகாரியாக இருக்கிறாள். காலையில் அவள் எழுந்திருக்கும் போது அவளை கொலை செய்ய ஒருவன் முயற்சிக்கிறான். இதற்கு நடுவே வயதான பெண் ஒருத்தி அந்த போலீஸ் அதிகாரியை காப்பாற்றுகிறாள். பிறகுதான் தெரிகிறது அந்த வயதான பெண்ணே அந்த போலீஸ் அதிகாரிதான். எதிர்காலத்தில் இருந்து இவரை காப்பாற்ற வந்துள்ளார். அந்த கொலைக்காரனும் எதிர்க்காலத்தை சேர்ந்தவன் தான். எதற்காக அவன் இவளை கொலை செய்ய நினைக்கிறான் என்பதை வைத்து கதை...

ஸகுவாரோ நிழல் ஓநாய்கள் (காமிக்ஸ்)

ஸகுவாரோ நிழல் ஓநாய்கள் (காமிக்ஸ்)  பக்கங்கள்: 98 கதாநாயகன் ஸ்குவாரோ ஒரு செவ்விந்தியன் ஆவான். வழக்கம் போல இந்த கதையும் வைல்ட் வெஸ்ட் காலக்கட்டத்தில் நடக்கிறது. என்னதான் செவ்விந்தியன் என்றாலும் வெள்ளையர்கள் வாழ்க்கை மீது ஆர்வம் கொண்டு அவர்களை போலவே ஆடை அணிந்து துப்பாக்கியுடன் சுற்றுபவனாகதான் ஸகுவாரோ இருக்கின்றான். ஆனால் செவ்விந்தியர்களின் உடல் திடம் இருக்கும் காரணத்தால் சண்டை என வந்துவிட்டால் அவனை தாக்குவது எளிது அல்ல. இந்த நிலையில் ஒரு கிராமத்தில் இருக்கும் தனி வீட்டை பணம் கொடுத்து வாங்குகிறான் ஸகுவாரோ. ஆனால் அந்த இடத்தை விற்ற உரிமையாளர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதற்கெல்லாம் காரணமாக ஃபால்சம் என்கிற ஊர் பெரியாள் ஒருவன்தான் இருந்து வருகிறான். கருப்பு உலகில் பல தில்லுமுல்லுகளை செய்து வரும் அவருக்கு ஸகுவாரோ வாங்கிய அந்த இடம் தேவைப்படுகிறது. அதற்காக நடக்கும் போராட்டத்தில் ஸகுவாரோவை போலிஸிடம் குற்றவாளியாக கோர்த்துவிடுகிறான் பால்சம். அதில் இருந்து ஸ்குவாரோ எப்படி தப்பிக்கிறார் என்பதாக கதை செல்கிறது. 90 பக்கத்தில் திரைப்படம் போன்று செல்கிறது காமிக்ஸ்.

மேற்கு சாளரம் - உலக சிறுகதைகள் தொகுதி 3.

மேற்கு சாளரம் - உலக சிறுகதைகள் தொகுதி 3 தமிழில்: எஸ்.ஷங்கர நாராயணன் 183 பக்கங்கள்  விலை: 120 உலகம் முழுக்க இருக்கும் பிரபலமான சிறுகதைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். தமிழ் சிறுகதைகளில் இருந்து மாறுபட்ட வகையில் எழுதப்பட்டுள்ள சில சிறுகதைகளை படிக்க முடிந்தது. முக்கியமாக ஒன்பது மைல் நடை, தனிமை, மணி பர்ஸ் போன்ற கதைகள் எல்லாம் ஒரு திரைப்படமாக்குவதற்கான தகுதியை பெற்ற கதைகளாக இருக்கின்றன. சிறுகதைகளை பொறுத்தவரை உலக அளவில் பார்க்கும்போது இன்னமும் மாறுப்பட்ட சிந்தனைகளை பார்க்க முடிகிறது. அதிலும் ஒன்பது மைல் நடை கதை கொஞ்சம் சிறப்பானது. இரு நண்பர்கள் சாதாரணமாக பேசி கொள்கின்றனர். அப்போது ஒரு நண்பன் கூறுகிறான். எந்த ஒரு சின்ன விஷயத்தையும் வைத்து அதன் பெரிய காரணங்களை என்னால் கண்டறிய முடியும் என்று. அப்போது இன்னொரு நண்பன் தான் ரயில்வே நிலையத்தில் காதில் கேட்ட ஒரு வசனத்தை கூறுகிறான். அது என்னவென்றால் “ஒரு ஒன்பது மைல் நடை ஒன்றும் விளையாட்டு கிடையாது. அதுவும் இந்த மழையில்” இந்த வசனம் யாரால் எதற்காக சொல்லப்பட்டது என்பது தெரியாது. அதை இன்னொரு நண்பன் அந்த வசனத்தின் வழியே கண்டறிகிறான். உதாரணமாக ஒன்பது ம...

சாய்கான் புதையல் (வெய்ன் ஷெல்டன்)

உலகப்போர் சமயங்களில் போர் நிறுத்த அறிவிப்பு அல்லது போர் நிறுத்தப்படும் நேரத்தில் எதிரி நாடுகள் சில வேலைகளை பார்க்கும். அந்த நாட்டின் நினைவு சின்னங்கள், அழகிய கட்டுமானங்களை முதலில் அழித்துவிடும். அதே போல அங்கிருக்கும் பொக்கிஷங்கள் மற்றும் செல்வங்களை சூரையாடிவிடும். அப்படியாக இரண்டாம் உலகப்போர் சமயத்தில் வெய்ன் ஷெல்டன் சிப்பாயாக இருந்துள்ளார். அந்த சமயத்தில் அவர் வெளியேறும் நாட்டில் இருந்து தங்க கட்டிகளை ராணுவ ஜெனரல் திருட சொல்கிறார். அவற்றை ரகசியமாக ஒரு இடத்திற்கு கொண்டு வந்து விமானத்தில் திருடி செல்வது அவரது திட்டம். ஆனால் அரசுக்கான வேலை என நினைத்து அதை செய்கிறார் வெய்ன் ஷெல்டன். ஒரு கட்டத்தில் அவர் வெய்ன் ஷெல்டனை கொலை செய்ய நினைக்கிறார். பதிலடியாக அவரை கொன்று அந்த விமானத்தையும் காலி செய்துவிட்டு செல்கிறார் வெய்ன் ஷெல்டன். பல டன் தங்கம் தண்ணீருக்குள் போய் செட்டில் ஆகிவிடுகிறது. இது நடந்து 30 வருடங்களுக்கு மேல் ஆன பிறகு அதை தேடுவதற்கான அழைப்பு வெய்ன் ஷெல்டனுக்கு வருகிறது. அதை ஏற்றுக்கொண்ட அவர் அந்த புதையலை கண்டறிந்தாரா என்பதாக கதை செல்கிறது. பரப்பரப்பான கதை அமைப்பை கொண்டு பெரிதாக சண்டை ...

டெக்ஸ் வில்லர் (சாபம் வாங்கிய சுரங்கம்)

  டெக்ஸ் வில்லர் (சாபம் வாங்கிய சுரங்கம்)  லயன் முத்து காமிக்ஸ் பக்கங்கள்: 226 பொதுவாக புதையல் ரகசியங்களுக்கு பின்னால் அமானுஷ்யமான ஒரு பின் கதை இருக்கும். ஃபேண்டசி கதைகளில் புதையல்களை பூதம் காப்பது போலவே இந்த கதையும் செல்கிறது. அமெரிக்கா வளர்ந்து வந்த காலக்கட்டத்தில் தங்க வேட்டை என்பது முக்கியமான விஷயமாக இருந்தது. அமெரிக்காவில் காடு மேடு எல்லாம் தங்க சுரங்கத்தை தேடுவதை பலரும் முக்கிய குறிகோளாக கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் தங்க திருட்டும் அதிகமாக இருந்தது. இந்த நிலையில் திருடப்பட்ட அதிக தங்கத்தை ஒரு குழுவினர் சுரங்கம் ஒன்றில் பதுக்குகின்றனர். அந்த சுரங்கத்தில் புதையல் இருப்பது பல காலங்களாக ஒரு வதந்தி போல சுற்று வட்டாரங்களில் வலம் வந்துக்கொண்டே இருக்கிறது. ஆனால் அதை தேடி போகும் யாருமே திரும்ப வருவதில்லை. இதனாலேயே அந்த புதையல் ஒரு சாபம் வாங்கிய புதையலாக மாறுகிறது. இந்த நிலையில் அந்த பிராந்தியத்திற்கு டெக்ஸ் வில்லர் வருகிறார் அவர் அந்த புதையல் குறித்த முடிச்சுகளை விடுவித்தாரா? என்ன நடந்தது என்பதாக செல்கிறது இந்த கதை..

தலைநகரில் தலைமகன் (டெக்ஸ் வில்லர்)

  தலைநகரில் தலைமகன் (டெக்ஸ் வில்லர்) லயன் முத்து காமிக்ஸ் பக்கங்கள்: 226 டெக்ஸ் வில்லர் காமிக்ஸ் என்றாலே தமிழில் வரும் ஆக்‌ஷன் படங்களை மிஞ்சிய கதைக்களம் அமைந்திருக்கும். அப்படியான ஒரு கதைதான் தலைநகரில் தலைமகன் காமிக்ஸ். ஒரு சில்லறை வேலையாக டெக்ஸ் மற்றும் கார்சன் இருவரும் ரயிலில் சென்று கொண்டுள்ளனர். அப்போது அந்த ரயிலில் ஒரு நபர் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். ரெக்ஸ் வில்லர் ஒரு ரேஞ்சர் என்பதால் உடனே அந்த நபரிடம் செல்கிறார். அந்த நபர் இறப்பதற்கு முன்பு ஒரு முக்கிய ஆவணத்தை அதிபரிடம் ஒப்படைக்க வேண்டும் என அந்த ஆவணம் இருக்கும் இடத்திற்கான குறிப்புகளை கொடுக்கிறார். அது என்னவென்றால் ஆபிரகாம் லிங்கனை கொலை செய்ததில் அரசில் முக்கிய பதவியில் இருக்கும் ஒரு ஆசாமிதான் காரணகர்த்தாவாக இருக்கிறார். அதற்கான ஆதாரங்கள்தான் அந்த ஆவணங்கள். அதை டெக்ஸ் எப்படி அதிபரிடம் கொண்டு சேர்க்க போகிறார் என்பதே கதை. மிஷன் இம்பாசிபல் படத்தை போலவே மிக சுறு சுறுப்பாக செல்லும் கதைக்களம்