Skip to main content

Posts

Showing posts from March, 2026

அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா

  அண்ணல் நபி குறித்து அறிஞர் அண்ணா தொகுத்தவர்: ஜே.எம் சாலி எம்.ஏ பொதுவாக இஸ்லாம் குறித்த கண்ணோட்டம் என்பது பொது புத்தியில் மாறியிருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் திரைப்படங்களில் துவங்கி பொதுவாகவே இஸ்லாமியர் என்றால் மோசமானவர் என்கிற பிம்பமே. அதற்கு தகுந்தாற் போல இஸ்லாத்தை வைத்து கடுமையான சட்டங்களை போடும் பிற்போக்குதனமான சட்டங்கள் இட்டுள்ள நாடுகளையும் நாம் பார்க்கிறோம். ஆனால் உண்மையில் அந்த மதம் அவர்களுக்கு எதை போதிக்கிறது எனும்போது இஸ்லாத்து அன்பைதான் போதிக்கிறது. அதை சிலர் சரியாக பின்பற்றுவதில்லை என்பதாக சில இஸ்லாமிய நண்பர்களே கூற கேட்டுள்ளேன். நபிகள் இஸ்லாத்தில் என்ன போதிக்கிறார் என்பதை விளக்கும் வகையில் அண்ணா பேசியுள்ள உரைகளின் தொகுப்புதான் இந்த புத்தகம். அறிஞர் அண்ணா ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்கிற கோட்பாடை நபிகளிடம் இருந்துதான் எடுக்கிறார். அல்லாஹ் ஒருவனே தேவன் என்கிற நபியின் கோட்பாடு ஒரு புரட்சி என்கிறார் அண்ணா. அதாவது 1400 ஆண்டுகளுக்கு முன்பு அரபு தேசத்தில் அல்லாஹ் முக்கிய தெய்வமாக இருந்தாலும் கூட பல்வேறு உருவங்களை கடவுள்களாக வணங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 300க்கு...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

உணவு சரித்திரம்

  உணவு சரித்திரம் ஆசிரியர்: முகில் வரலாற்று நிகழ்வுகளை சுறுசுறுப்பாக படிப்பதற்கு எளிமையாக எழுதக்கூடிய ஒரு சில தமிழ் எழுத்தாளர்களில் முக்கியமானவர் எழுத்தாளர் முகில். வெளிச்சத்தின் நிறம் கறுப்பு மூலமாக முகில் புத்தகம் மீது ஆர்வம் உண்டானது. அடுத்து இப்போது படித்த புத்தகம் உணவு சரித்திரம் தக்காளி, வெங்காயம் மிளகாயில் துவங்கி இன்னும் எத்தனையோ உணவு பொருட்கள் காலம் காலமாக நம் பூமியில் விளைகின்றன என்றுதான் நானும் கூட பல காலங்களாக நினைத்து வந்தேன். ஆனால் உண்மையில் அப்படியல்ல என்பது சில மாதங்களுக்கு முன்பு ராய் மார்க்ஸம் எழுதிய அடிமைப்படுத்தப்பட்ட இந்தியா புத்தகத்தை படித்தப்போது தெரிந்தது. அதில் கொஞ்சமாக இது பற்றிய விஷயங்கள் இருந்தன. தற்சமயம் முகில் புத்தகம் முழுக்க முழுக்கவே உணவுகளின் வரலாற்றை கொண்டதாக உள்ளது, உண்மையில் பக்கத்துக்கு பக்கம் வியப்புகளை அளிக்க கூடிய ஒரு புத்தகம் என்றுதான் கூற வேண்டும். எப்போதும் விடை தெரியாத சின்ன சின்ன சந்தேகங்களுக்கு நாமே ஒரு விடையை உருவாக்கி கொள்வோம். அப்படியாக இவ்வளவு நாளாக ஏதோ மரத்தில் வழியும் பிசின் தான் பெருங்காயம் என்றுதான் நான் நினைத்து வந்தேன். அதுவே...