Skip to main content

Posts

Showing posts from November, 2020

மதத்தால் அழிந்த மனிதத்திற்கு மற்றுமொடு எடுத்துக்காட்டு இந்திய பிரிவினை- (உதிரத்தால் ஒரு கோடு)

  இந்திய பிரிவினை- உதிரத்தால் ஒரு கோடு மருதன் காலச்சுவடு பதிப்பகம் இந்திய பிரிவினை குறித்து முடிந்த அளவு தகவல்களை முன் வைத்த புத்தகம். சில தகவல்கள் விடுப்பட்டிருக்கலாம். முதலில் இந்த புத்தகத்தை படிக்கும் போது எனக்கு தோன்றியது என்னவென்றால் மத ரீதியான ஒரு புத்தக விமர்சனத்தை அல்லது மத ரீதியான கருத்தை பொது வெளியில் முன் வைக்கும் போது மதவாதிகளை புண்படுத்துவதாக அது அமைகிறது என பலர் சண்டைக்கு வருகிறார்கள். இந்த புத்தகம் மூலம் நான் சில விஷயங்களை அவர்களுக்கு விளக்க நினைக்கிறேன். ஒரு மதம் என்ன செய்ய முடியும். எதற்காக மத வாதிகள் மதங்களை பின்பற்றுகின்றனர். கண்டிப்பாக கடவுள் தனக்கு நன்மை செய்வார் என்னும் காரணத்துக்காகவே அவர்கள் கடவுளை (தங்கள் மத கடவுளை) நம்புகின்றனர். இவர்களுக்கு மதம் குறித்த அரசியல் தெரியாமல் இருக்கலாம். அல்லது தெரிந்தும் அதை கண்டுக்கொள்ளாமல் இருக்கலாம். இப்படியாக பின்பற்றும் ஒவ்வொரு மதவாதிகளும் ஆபத்தானவர்கள் என்றால் அது நிச்சயம் மத வாதிகளுக்கு அபத்தமாக தோன்றலாம். நான் எனது பகவானை, இயேசுவை, அல்லாஹ் வை வணங்குகிறேன். அதில் என்ன நாங்கள் உங்களுக்கு ஆபத்தை உண்டாக்கி விட ப...