செல்போன், இண்டர்நெட் வந்துச்சு.. இப்ப நாடே நாசமா போச்சு என கூறும் ஒரு குழுவினர் எப்போதும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள்தான் அதிகமாக இருந்துள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால்தான் 2004 சுனாமியில் இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகள் வந்த பிறகுதான் கிராமங்களில் கள்ள தொடர்புகள் குறைந்ததாக கி.ரா கோபல்ல கிராமம் கதையில் கூறுகிறார். அதுக்கூட தொழில்நுட்பத்தின் ஒரு நன்மைதானே. இப்போது சுனாமிக்கு வருவோம் Tsunami - Race Against Time என்கிற ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. சுனாமியை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமே அணுகிய என்னை போன்றவர்களுக்கு சுனாமி குறித்து கேட்காத பல விஷயங்களை இந்த ஆவணப்படம் கூறுகிறது. சுனாமியின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நிஜ வீடியோக்களை கொண்டே ஒட்டு மொத்த ஆவணப்படமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பெரிதாக சுனாமி ஏற்படாத ஒரு பகுதியாக இருந்து வந்தது. அதனால் சுனாமி எச்சரிக்கை மையங்கள் எதுவுமே இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த நாடுகளுக்கு அப்போது கிடையாது. இந்த நிலையில்தான் 2...