Skip to main content

Posts

Showing posts from February, 2025

வந்த பாதை - காமிக்ஸ்

பென் என்கிற நிறுவனம் குழந்தைகளுக்கு சமூகநீதி விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு நல்ல முன்னெடுப்பாக சமூகநீதி காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். போன காமிக் கானின் போதே அரசியல் தொடர்பான மக்களின் முதல்வர் என்கிற வீடியோ கேமை வெளியிட்டிருந்தனர். அதில் கேம் விளையாடும் நாம்தான் முதல்வராக இருப்போம். நாம் எடுக்கும் முடிவுகளின் அடிப்படையில் அடுத்து நாம் முதல்வராக முடியுமா இல்லையா? என கேம் செல்லும். அதில் கேட்கப்படும் கேள்விகளே சமூக நீதி அடிப்படையில் இருப்பதை பார்க்க முடிந்தது. இந்த நிலையில் இந்த வருடம் அடுத்த முன்னெடுப்பாக தமிழில் குழந்தைகளுக்கு சமூகநீதியை பயிற்றுவிக்கும் ஒரு முன்னெடுப்பாக மூன்று காமிக்ஸ்களை வெளியிட்டுள்ளனர். வந்த பாதை காமிக்ஸை பொறுத்தவரை வயதான பெரியவர் எப்போதுமே புத்தகங்களை படித்து வருபவராக இருக்கிறார். இந்த நிலையில் சாதிய பாகுபாடு உள்ள அந்த கிராமத்தில் தொடர்ந்து பெரியவரின் தெருவை சேர்ந்த குழந்தைகள் உடல் அளவில் மனதளவிலும் தாக்கப்படுகின்றனர். அதற்கு எதிராக பெரியவர் எடுக்கும் போராட்டங்களை வைத்து கதை செல்கிறது. இந்த பெரியவர் அப்படியே பெரியாரின் சாயலாக இருக்கிறார். பெரியார் பெரிய அளவில் செய்...

ஸ்பூன் அண்ட் ஒயிட் குத்துங்க எசமான் குத்துங்க - காமிக்ஸ்

9-ம் நூற்றாண்டில் சீனாவில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்கள், வறுமை மற்றும் வேலைவாய்ப்பின்மை போன்ற காரணங்களால் பலர் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தனர். குறிப்பாக கலிபோர்னியாவில் தங்கம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, அங்கு ஏராளமான சீனர்கள் குடியேறினர். இவர்கள் தமக்கென ஒரு சமூகத்தை உருவாக்க விரும்பினர். இதன் விளைவாக சைனா டவுன்கள் தோன்றின. இந்த டவுன்களில் சீன உணவகங்கள், கடைகள், கோவில்கள் மற்றும் சமூக கூடங்கள் அமைக்கப்பட்டன. இங்கு சீன கலாச்சாரம் மற்றும் பாரம்பரியங்கள் பேணிக்காக்கப்பட்டன. சில முக்கியமான சைனா டவுன்கள் பின்வருமாறு: சான் பிரான்சிஸ்கோ சைனா டவுன்: இது அமெரிக்காவின் மிகப் பழமையான மற்றும் பெரிய சைனா டவுன் ஆகும். நியூயார்க் நகரம் சைனா டவுன்: இது நியூயார்க் நகரில் உள்ள ஒரு பெரிய சைனா டவுன் ஆகும். சிகாகோ சைனா டவுன்: இது சிகாகோ நகரில் உள்ள ஒரு சைனா டவுன் ஆகும். ஸ்பூன் அண்ட் ஒயிட் என்பது காமிக்ஸில் வரும் இரண்டு நாயகர்களின் பெயர்கள்தான். அமெரிக்காவில் பூர்வ குடிகளாக செவ்விந்தியர்களை தவிர பாக்கி எல்லாம் வந்தேறிகள்தான். ஆனால் அதில் வெள்ளையர்கள் மட்டும் ஏனோ தங்களை பூர்வ அமெரிக்கர்களாகவும், அமெரிக்கா தங்...

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன்

அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன் பக்கங்கள் 34 பாரதிதாசன் தொடர்ந்து திராவிட கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவரது எழுத்துக்களிலும் அதன் பிரதிபலிப்பு என்பது இருந்துள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய இரு கதைகள்தான் அகத்தியன் விட்ட புதுக்கரடி மற்றும் நல்லமுத்துவின் கதை கரடி விடுகிறான் பார் என நாம் கூறுவோம் இல்லையா.. அதனை அடிப்படையாக கொண்டுதான் அகத்தியன் விட்ட புதுக்கரடி கதை அமைந்துள்ளது. அகத்தியன் தான் தமிழுக்கு இலக்கணம் அமைத்ததாகவும் அதனை அவர் சிவப்பெருமானிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கதை உண்டு. அதனை தொடர்ந்து அவரது சீடர் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் எழுதியாக ஒரு கதை உண்டு. இப்படியான கரடிகளைதான் பாரதிதாசன் விமர்சிக்கிறார். ஒன்றாக இருந்த தமிழர்கள் மத்தியில் பிராமணியத்தை பரப்ப வந்த முனிதான் அகத்தியன். அகத்தியன் வந்த பிறகு பல அறியாமைகளை அவன் மக்கள் மத்தியில் பரப்புவதாக கதை செல்கிறது.  நல்லமுத்துவின் கதையை பொறுத்தவரை அவன் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என வாழ்ந்து வருகிறான். அப்பன் பக்கத்து கிராமத்தில் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்தப்போதும...