இந்தியா அடிமைப்படுத்தப்பட்ட வரலாறு… ஐரோப்பிய ஆக்கிரமிப்புகள் (1498-1765) ஆசிரியர்:ராய் மாக்ஸம் கிழக்கு பதிப்பகம் பக்கங்கள்: 278 இந்தியா குறித்து சில முக்கியமான புத்தகங்களை எழுதியவர்தான் எழுத்தாளர் ராய் மாக்ஸம். இவரின் ஆய்வுகள் பலவும் இந்திய வரலாறு குறித்து முக்கியமான விஷயங்களை பேசுகின்றன. ஏற்கனவே இவர் எழுதி தமிழில் வெளியான உப்புவேலி மற்றும் தே ஒரு இலையின் வரலாறு ஆகிய புத்தகங்களை படித்துள்ளேன். அந்த வகையில் இது மூன்றாவது புத்தகம். ஆங்கிலத்தில் The Theft of India: The European Conquests of India 1498–1765 என்று வெளியான புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்புதான் இந்த புத்தகம். பெரும்பாலும் பள்ளி காலத்தில் இந்திய விடுதலை குறித்து படிக்கும்போது ஏதோ பிரிட்டிஷார்தான் நம்மை அடிமைப்படுத்தியதாகவும் அதற்கு முன்பு இந்தியர்கள் எல்லையை கூட யாரும் தொட்டதில்லை என்பது போலவும் நினைத்து கொண்டிருந்திருப்போம். ஆனால் அதற்கு முன்பே இந்தியாவை கொள்ளையடித்து போன பல கூட்டங்களை இந்த புத்தகம் விவரிக்கிறது. 1498 இல் முதன் முதலாக வாஸ்கோடாகாமா என்கிற வெள்ளையன் கேரளாவில் உள்ள கோழிகோட்டில் காலடி எடுத்து வைப்பதில் இருந்...