இந்திக்கு இங்கே
இடமில்லை
அறிஞர் அண்ணா
பக்கங்கள்
42
தமிழ்நாட்டில்
திமுகவின் வருகையும், இந்தி எதிர்ப்பும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் நடந்த விஷயங்கள்
1938 ஆம் ஆண்டே நேரு இந்தியை இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலத்திற்கு பதில் கொண்டு
வர நினைத்தார். ஆனால் அப்போதே அதற்கு எதிர்ப்பு வந்ததால் அதை தற்காலிகமாக நிறுத்தியுள்ளார்.
அதற்கு பிறகு
1965 காலக்கட்டங்களில் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி பகிரங்கமாக இந்தியை இந்தியா முழுமைக்குமான
பொது மொழியாகவும் ஆட்சி மொழியாகவும் அறிவிக்கிறார். இதனை தொடர்ந்து இந்தி திணிக்கப்படுகிறது.
இந்நிலையில்
தேசிய மாணவர் படை என்கிற அமைப்பு இந்தியை எதிர்த்து தமிழ்நாடு அளவில் போராட்டத்தை நிகழ்த்துகின்றன.
அந்த சமயத்தில் பத்திரிக்கைகளில் தொடர்ந்து இந்தியை எதிர்த்து எழுதி வந்தவர்கள் அண்ணாவும்
கருணாநிதியும்.
அப்போது முதலமைச்சராக
இருந்த பக்வசத்சலம் நிகழ்த்திய வன்முறையில் 200க்கும் அதிகமானோர் இறந்தனர். அதற்கு
பிறகு இப்போது வரை தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சி அமைக்கவில்லை. அடுத்த தேர்தலில் காங்கிரஸ்
தோற்று திமுக ஜெயிக்கிறது.
அண்ணா முதலமைச்சராகிறார்.
அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய உரைதான் இந்த புத்தகம். ஏன் இந்தி எங்களுக்கு தேவையில்லை
என்பதை மிக ஆணித்தரமாக இதில் அண்ணா பேசியுள்ளார் மட்டுமின்றி அப்போது நடைமுறையில் இருந்த
மும்மொழி கல்வி கொள்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.
அடுத்த இரண்டு
ஆண்டுகளில் அரசு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தமிழை முதன்மை மொழியாகவும், முதன்மை
பாடமாகவும் ஆக்குவேன் என வாக்குறுதி அளித்துள்ளார். தமிழ் மொழி காக்கப்பட்டதில் வரலாற்றில்
மிக முக்கியமான தருணம் அண்ணா சட்டமன்றத்தில் பேசிய தருணம்.
ஏன் இது வரலாற்றில்
மிக முக்கியமான தருணம் என்றால் அந்த சமயத்தில் ஹிந்தியை ஏற்றுக்கொண்ட மாநிலங்கள் தங்கள்
தாய்மொழியை பிறகு இழந்தன. ராஜஸ்தானிலோ குஜராத்திலோ தங்கள் பாட்டிகள் பேசும் தாய்மொழி
பேரப்பிள்ளைகளுக்கு புரிவதில்லையாம்.
இன்னும் சிம்பிளாக
சொல்ல வேண்டும் என்றால் ஆங்கில படங்களும் சரி, இந்தியாவில் இருக்கும் கார்ட்டூன் நெட்வொர்க்
மாதிரியான சேனல்களிலும் சரி ஹிந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், ஆகிய மொழிகளில் டப்பிங்
இருப்பதை பார்க்க முடியும். ஆனால் ஏன் குஜராத்தி, பஞ்சாபி மாதிரியான மொழிகளில் அவை
டப்பிங் ஆவதில்லை என்பதை புரிந்துக்கொள்ள முடிந்தாலே போதும்.
அப்படிப்பட்ட
நிலையில் தமிழ் காப்பாற்றப்பட்டதில் அண்ணாவின் பங்கு மிக முக்கியமானது. அதனாலேயே இதை
வரலாற்றின் மிக முக்கிய தருணம் என குறிப்பிடுகிறேன்.
எனவே இந்த புத்தகம்
தமிழக வரலாற்றின் மிக முக்கியமான ஒரு பக்கத்தை பதிவு செய்துள்ளது. வாய்ப்புள்ளவர்கள்
படித்து பாருங்கள்.
Comments
Post a Comment