Skip to main content

புதிய வரலாறு - அறிஞர் அண்ணா

 பல வருட போராட்டங்களுக்கு பிறகு அறிஞர் அண்ணா தமிழ்நாட்டில் ஆட்சி அமைத்தப்போது காங்கிரஸ் தோல்வியை கண்டது. அதற்கு முன்பு நடந்த இந்தி திணிப்பு காரணமாக தமிழக மக்கள் காங்கிரஸ் மீது அதிக வெறுப்பில் இருந்தனர். அதனாலேயே முக்கியமாக திமுக வென்றது.

இப்போது விஜய்யை எப்படி திமுக விமர்சனம் செய்து வருகிறதோ அதே மாதிரியான விமர்சனங்களை அப்போது காங்கிரஸ் திமுக மீது அள்ளி விட்டுள்ளது. அண்ணா ஆட்சி அமைத்த பிறகு அதற்கு பதிலளித்து எழுதிய புத்தகம்தான் இந்த புதிய வரலாறு.

ஏதோ இளைஞர்கள் எல்லாம் கூடி ஆட்சி அமைத்துவிட்டனர். இந்த ஆட்சி நிலைக்காது, எல்லாம் கத்துக்குட்டிகள் என்பதுதான் அப்போது காங்கிரஸின் நிலைப்பாடாக இருந்தது. ஆனால் அப்போதைய திமுகவை எந்த விதத்திலும் த.வெ.கவுடன் ஒப்பிட முடியாது. திமுக இளைஞர்களில் பலபேர் அப்போது இந்தியை எதிர்த்த தேசிய மாணவர் படையில் உறுப்பினராக இருந்தவர்கள்.



துரைமுருகன், வைகோ போன்ற பலரும் அப்போது மாணவர் படையில் இருந்து போராடியவர்கள். தமிழக அரசியல் தெரிந்தே அரசியலுக்குள் வந்தனர். அவர்களை அரசியல்ப்படுத்தப்படாத இந்த கூட்டத்தோடு ஒப்பிட முடியாது. ஆனால் சூழ்நிலை இப்போது போலவே இருந்தது என்பதற்காக மட்டுமே ஒப்பீடு செய்தேன்

அப்போது மத்திய சர்க்காராக இருந்த காங்கிரஸ் தொடர்ந்து தனக்கு கொடுத்த அழுத்தம் குறித்து அண்ணா இதில் விளக்கியிருக்கிறார். முக்கியமாக காங்கிரஸ் இருந்த சமயத்தில் பஞ்சம் அதிகமாக இருந்துள்ளது. அதனால் சில மாவட்டங்களில் ஒரு படி அரிசி ஒரு ரூபாய்க்கு அண்ணா வழங்கியுள்ளார்.

தேர்தல் சமயத்திலேயே அதற்கு வாய்ப்பே இல்லை என கூறி வந்தது காங்கிரஸ். ஆனால் அண்ணா வந்த பிறகு அதை செயல்படுத்தியுள்ளார். இது ஒரு பெரிய விஷயமாக அப்போது பார்க்கப்பட்டுள்ளது. அரிசியின் தேவை அந்த அளவிற்கு இருந்துள்ளது.

அதே சமயம் இந்த அரசியல் கூட்டத்தால் மக்கள் வெகுமளவு கஷ்டப்பட்டுள்ளனர். உதாரணத்திற்கு தாம்பரம் பகுதி அப்போது முக்கிய விவசாய கிராமமாக இருந்துள்ளது. அங்கு அரிசி விளைவிக்க வேண்டும் என திமுக கூறியுள்ளது. ஆனால் அரிசி விளைவிக்க கூடாது கரும்பு விளைவியுங்கள் என காங்கிரஸ் அழுத்தம் கொடுத்துள்ளது. (அந்த சமயத்தில் வட இந்தியாவுக்கு தேவையான பெருமளவு சர்க்கரை தமிழ்நாட்டில் இருந்தே சென்றுள்ளது).

இந்நிலையில் கரும்பை விளைவித்தால் ஏரியை திறந்து தண்ணீர் தர மாட்டோம் என விவசாயிகளுக்கு அப்போது அமைச்சராக இருந்த கலைஞர் எச்சரிக்கை கொடுத்துள்ளார். எனவே இந்த இரண்டு கட்சிகளிடமும் மாட்டி கொண்டு மக்களும் கஷ்டப்பட்டு உள்ளனர்.

இந்த புத்தகம் முழுக்க அறிஞர் அண்ணா காங்கிரஸை குறை சொல்லியுள்ளார். சில இடங்களில் அது விஜய் திமுகவை குறை சொல்லும் பாணியிலும் உள்ளதுதான். ஆனால் முழு முற்றாக காங்கிரஸ் அவ்வளவு மோசமாக இருந்திருக்குமா என தெரியவில்லை.  ஆனால் அப்போதைய அரசியல் களம் குறித்து அறிந்துக்கொள்ள இந்த புத்தகம் உதவியாக இருக்கும்.

 

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...