பல்லை கடிச்சிக்கிட்டு மொத பாதியை மட்டும் பார்த்துட்டா அடுத்த பாதி அருமையான படம்.
ஆதித்ய வர்மா, இஸ்பேர் ராஜாவும் இதய ராணியும் போன்ற படங்களில்
வரும் ரோசமான ஹீரோக்கள் வகையாறாவை சேர்ந்தவர் நம்ம ஹீரோ. இந்த ஹீரோக்கள் எல்லாம் எப்பவும்
சுய நலமாத்தான் இருப்பாய்ங்க. கூட இருக்குற நண்பர்கள் சாப்பிட்டாய்ங்களான்னு கூட கேக்க
மாட்டான். ஆனா நண்பர்கள் இந்த ஹீரோவை குழந்தை போல பாத்துக்குவாய்ங்க. டையப்பர் மாத்திவிடாததுதான்
குறை. அது என்னான்னா அப்படி ஒரு நண்பர் கூட்டம் இருந்தா தான் ஹீரோவால என்ன வேணா செய்ய
முடியும் இல்லையா. இப்படியாக ஹீரோ தோன்றுவய்ங்க எல்லாரையும் அடிச்சிட்டு சுத்திட்டு
இருக்குறப்ப தலைவி ராஸ்மிகா எண்ட்ரி
நம்ம ஹீரோ பொம்பள பிள்ளையல்ட்ட எப்பவும் கடு கடுன்னேதான்
இருப்பார். ராஷ்மிகாக்கிட்டயும் அப்படியே கடு கடுன்னு ஒரு முதல் சந்திப்பு. அதுக்கு
பிறகு ரெண்டு பேருக்குள்ளயும் காதல் வருது. டெல்லிக்கே ராஜான்னால்லும் பல்லிக்கு புள்ளதான
என்பது போல் காதல், அதனால் ஏற்படும் பிரிவு. நம்ம அடித்தடி ஹீரோவை திருத்துகிறது.
இதுல ராஸ்மிகாவோட கதாபாத்திரம் கொஞ்சம் தேவலையா இருந்துச்சு. எப்போதும் இந்த போக்கிரி பயக கிட்ட லவ் ஆனதும் அந்த பிள்ளைய பாடா படுத்துவாய்ங்க. அதுல அதிகமா ஆணாதிக்க தன்மையை பாக்கலாம். எப்போதும் கெஞ்சுறவங்களா பொம்பளை பிள்ளைகதான் இருப்பாங்க. ராஸ்மிகாவும் அப்படிதான் இருப்பா, ஆனா ஒரு லெவலுக்கு அப்புறம் போடா மயிறுன்னுட்டு போயிடும். அது கொஞ்சம் தேவலையா இருந்தது. அந்த பிரிவுக்கு அப்புறம் உள்ள கதைதான் படம்.
நம்ம ஹீரோ அடிதடி எல்லாம் விட்டுட்டு டிராவலர் ஆன பிறகு தன்
காதலி அவளோட இலக்க விட்டு ரொம்ப தூரம் வந்துருப்பா. திரும்ப காதலி தன்னோட இலக்கை அடைய
ஹீரோ எடுக்கும் பயங்கரமான முயற்சிகள் சொச்ச கதை. முதல் பாதி வழக்கமான க்ரிஞ்ஜா இருந்தாலும்
அந்த எவ்ளோ பெரிய சைக்கோ மயிறா நீ இருந்தாலும் வாழ்க்கை செய்யுற செய்கைல சர்வமும் அடங்கி
போயிடும்ங்குறது நல்லா இருந்துச்சு… இதை பூவே உனக்காக ஸ்டைல்ல சொல்லணும்னா ஒரு கல்லையும்
சிற்பமாக்கும் சக்தி காதலுக்கு உள்ளதுங்கலாம். கடைசில என்னையும் ராஸ்மிகா ரசிகனா ஆக்கிட்டாய்ங்க.
அப்புறம் படத்துல அழைப்பாயா, நான் வருவேன் 2 பாட்டும் செம.
“உன் இலக்க நோக்கி போகும்போது பிரச்சனை வர்றப்ப உன்னோட பயணிக்கிற
உண்மையான தோழன்தான் காம்ரெட்”
Comments
Post a Comment