Skip to main content

கடவுளாகிறார் மாட்டு கோமியம் குடித்த நாராயணன் - 2


எவ்வளவு நேரம் இப்படியே மயங்கி கிடந்தார் என்று நாரயணனுக்கே தெரியவில்லை. முழித்து பார்த்தபோது அவர் போட்டிருந்த உடைகளும் மற்ற அனைத்தும் தெளிவாக தெரிந்தது. உடலின் பாகங்கள் கண்களுக்கு புலப்படவில்லை. ஏதோ ஒரு யோசனையில் போட்டிருந்த அனைத்து உடைகளையும் கழற்றி எறிந்தார்.
“ஒரு வேளை கனவு ஏதும் கண்டுகொண்டு இருக்கிறோமோ. போய் ஆற்றில் விழுந்து இறந்துவிட்டால் கனவு கலைந்து நிஜ உலகிற்கு சென்றுவிடலாம்”  என யோசித்தார். ஆனால் கனவில் மயக்கமாக முடியாதே. முற்றிலும் குழப்பமாக இருந்தது. மீண்டும் கண்ணாடியை எடுத்து பார்த்தார். இந்த முறை முகம் சுத்தமாக தெரியாமல் போயிருந்தது.
“இது என்னடா நமக்கு வந்த சோதனை… நேற்று பகவானிடம் குடும்ப பிரச்சனை குறித்து வஞ்சனையாக சில திட்டுக்கள் திட்டியதால் பகவான் நமக்கு சாபமளித்துவிட்டாரா?”
மிகவும் குழப்பமாக இருந்தது நாரயணனுக்கு. திடீரென்று அவருக்கு ஒரு எண்ணம்
“இது ஏன் நமக்கு கிடைத்த வரமாக இருக்க கூடாது”.
நாராயணன் ஒரு கலாச்சார காவலர் .மனைவி இடை தெரிவது போல ஆடை உடுத்தினாலே திட்டுவார். அதற்கு காரணம் உண்டு அவர் பெண்கள் மேல் அதிக ஈடுபாடு உடையவர். கோவிலுக்கு மனைவியோடு செல்லும் போது பெண்கள் கண்களை மூடி கடவுளை வணங்கும் நேரத்தில் அவர்கள் அங்கங்களை பார்த்து ரசிப்பது நாரயணனுக்கு மிகவும் பிடித்த நிகழ்வு. தன்னை போன்றுதானே உலக ஆண்கள் அனைவரும் இருப்பார்கள் என்ற எண்ணத்தாலேயே தனது மனைவிக்கு உடை குறித்து பல சட்டங்களை விதிப்பவர் நாராயணன்.
பழைய காலத்து சரோஜா தேவி முதல் இப்போது உள்ள சவிதா பாபி வரை பல இலக்கியங்களை பயின்றவர் என்றாலும் ஒருவனுக்கு ஒருத்தி என வாழ்பவர். ஆனால் தற்சமயம் வந்த இந்த சக்தி நேற்று பார்த்த இன்விசிபிள் மேன் என்ற ஆங்கில படத்தையும் பக்கத்து வீட்டு பரிமளா வையும் நாராயணனுக்கு நினைவூட்டியது. அப்போது தான் தனது மனைவி தேவி தன்னை கடந்து செல்வதை கண்டார். திடீரென்று பகவான் ராமர் மடேர் என்று தலையில் தட்டியது போன்ற ஒரு ஞானம். தன் மனைவி கணவனே கண் கண்ட தெய்வம் என்று நம்பி வாழ்கிறாளே அவளை விட்டு பரிமளத்தை நினைத்தோமே. எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டோம்.
அனைத்து எண்ண ஓட்டங்களும் திடீரென்று நின்றன. இப்போது நாராயணனை பயம் பிடித்துக்கொண்டது. ஆயுளுக்கும் யார் கண்ணுக்கும் தெரியாத ஒரு வாழ்வை வாழ போகிறோமோ என்கிற பயம் தான் அது. ஸ்டேட் வங்கியில் மாதம் 80,000 சம்பளம் வாங்கும் உயர் ரக ஏழைகள் வகுப்பை சார்ந்தவர் நாராயணன். தற்போதைய நிலையில் வேலைக்கு போகாமல் அந்த சொற்ப தொகையும் கிடைக்காமல் போய்விடுமே என்ற எண்ணம் பயமுறுத்தியது.
“அதான் கண்ணுக்கு தெரியாமல் மறைஞ்சுட்டோமே. இனி கடைகளில் கல்லா பெட்டியையே திருடலாம்.”
 பல எண்ண ஓட்டங்கள் திரும்ப ஓட ஏதோ சத்தம் கேட்டு திரும்பி பார்த்தார் நாராயணன். அது வள்ளியின் குரல்தான் அவள் நாராயணனை காணவில்லை என்று தேடிக்கொண்டு இருந்தாள். மணி எட்டு ஆகி இருந்தது. வேலைக்கு நேரமாகி கொண்டிருந்தது அப்போது தான் அவருக்கு தெரிந்தது. இதை எல்லாம் மீறி பரிமளம் குளிக்கும் சோப்பின் வாசனை நாராயணனை கடந்து சென்றது. பரிமளம் வீடு அதிக தொலைவு என்றாலும் அவள் குளிக்கும் மைசூர் சான்டல் சோப்பின் வாசம் தெருவுக்கே மணக்கும். திடீரென்று கிருஷ்ண பகவான் புற மண்டையில் தட்டி தனது லீலைகளை கூற ஆரம்பித்தார். நாராயணின் மனதில் ராமருக்கும் கிருஷ்ணருக்கும் இடையே ஒரு போர் நடந்தது அதில் கிருஷ்ணரே வென்றார். கிருஷ்ணர் அளவுக்கு லீலைகள் செய்யாவிட்டாலும் பரிமளம் குளிப்பதை பார்க்கும் தனது ஆசையை நாராயணனால் கட்டுப்படுத்த முடியவில்லை.
பரிமளம் ஏழை வீட்டு பெண். கூரையில் குளியல் அறை கட்டப்பட்டிருப்பதால் கூரை இடுக்கு வழியாகவே குளிப்பதை நன்கு பார்க்க முடியும். வேக வேகமாக நடந்தார் நாராயணன் பரிமளத்தை காண ஆசை பெருக்கிடுத்து ஓட நாராயணனும் பரிமளம் வீட்டை நோக்கி ஓட கிட்டதட்ட வீட்டில் இருந்து பாதி தூரம் கடந்து மெயின்ரோட்டை வந்தடைந்த போது உடலில் திடீர் மாற்றம். ஓடிய கால்கள் அப்படியே நின்றன. புதிய 2000 செல்லாது என அறிவித்தது போன்ற ஒரு அதிர்ச்சி. நாராயணனுக்கு தன்னுடைய உடல் மெலிதாக கண்ணுக்கு தெரிந்தது…. கூட்டம் அலை மோதும் மெயின் ரோட்டில் அடித்த ஐந்து நிமிடத்தில் நடக்க போகும் சம்பவத்தை எண்ணி வேகமாக அடித்து கொண்டது ஒட்டு துணி இல்லாமல் நின்று கொண்டிருந்த நாராயணனின் இதயம்….
தொடரும்…

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...