“சாணியில்
என்ன மணக்குதோ தினமும் என்ன கரைக்க விட்டுடுறாள் இந்த சுக்கு” புலம்பியப்படியே சாணியை
கரைத்து கொண்டிருக்கும் நாராயணன் ஐயர் ஒன்றும் முற்போக்கு சிகாமணி கிடையாது. மாமுலான
பிராமணாள் போன்றே மாட்டு மூத்திரத்தின் மீது தீராத ஈடுபாடு உண்டு அவருக்கு. யாராவது
“ஏன்
ஓய் மாட்டு மூத்திரத்தை போய் மடக்… மடக்குன்னு குடிக்கிறியே என்று கேட்டால் உடனே ஒரு
காரணத்தை எடுத்துவிடுவார் நாரயணன்.
“அடேய்
சுக்கு மாட்டு கோமியத்துல உள்ள அறிவியல் தெரியுமாடா நோக்கு” அடுத்த ஐந்து நிமிடத்தில்
கேள்வி கேட்டவன்… ஓட்டம்தான்..
தினமும்
வெறும் வயிற்றில் கோமியம் குடித்தால் வயிற்றை சுத்தப்படுத்திவிடும் மற்றும் ஆஸ்துமாவை
குணபடுத்தும் என்று இணையத்தில் எவன் சொல்வதையோ கேட்டு கடந்த இரண்டு வருடங்களாக தினமும்
காலை கோமியம் குடித்து குடித்து இப்போழுது அதுவே பழகிவிட்டது நாரயணனுக்கு.
அதிலும்
நாரயணுக்கு தன் வீட்டு செண்பகத்தின் கோமியம் பிடிக்காது. அவள் பண்ணை மாடு தினமும் வைக்கோல்
மட்டும் தான் உண்பாள். ஆனால் முனியன் வீட்டு கறுப்பி இருக்காளே அவளை போல் சத்தான கோமியம்
ஆசிய கணடத்தில் எந்த மூலையிலும் கிடைக்காது அவள் ஊர் சுற்று உலா வரும் மேய்ச்சல் பசு.
கண்டது கடையது என்று மேய்வாள். நல்ல தரமான கோமியத்தை தருவாள். இதனாலேயே நாராயணனுக்கு
கறுப்பியை பிடிக்கும்.
தினமும்
காலை 6 மணிக்கெல்லாம் கோமியம் கொண்டு வரும் முனியன் மணி 7 ஆகியும் இன்னும் வரவில்லை.
தாமதமாய் வந்தால் கூட ஆறரைக்குள் வரும் முனியன் மணி ஏழு ஆகியும் வரவில்லை. வேறு வழியில்லை
இன்று செண்பகத்தின் கோமியம் தான் தலையெழுத்து..
ஆனால்
அதிலும் பெரிய பிரச்சனை வந்தது. செண்பகம் இன்னும் சிறுநீர் கழிக்கவில்லை. சொர்க்க வாசல்
திறக்க பக்தர்கள் காத்திருக்கும் கணக்காய் எப்பொழுது கோமியம் வரும் என்று பாத்திரத்தை
வைத்துக்கொண்டு காத்துக்கொண்டிருந்தார் நாரயணன். சரியாக 7.25 க்கு கதவு திறந்து வெளிர்
மஞ்சள் நிறத்தில் கோமியம் வந்தது. மட மட வென்று கோமியத்தை பிடித்து கட கட வென குடித்தார்
நாரயணன்.
கறுப்பியின்
கோமியம் போல் மிதமான உப்புடன் இல்லாமல் மிகவும் உவர்ப்பாய் இருந்தது செண்பகத்தின் கோமியம்.
“இந்த
சுக்குக்கு நான் கோமியம் குடிக்காமலே இருந்திருக்கலாம்.”
முகத்தை
சுளித்துக்கொண்டு சொன்னார் நாராயணன்.
“இந்த
21 ஆம் நூற்றாண்டிலே இவ்வளவு உப்பாக ஒரு கோமியத்தை இந்த சண்டாளியால் தான் குடுக்க முடியும்”.
ஏசியப்படியே
சவரம் செய்ய கண்ணாடியை எடுத்தார் நாரயணன் கண்ணாடியை பார்த்ததும் அதிர்ந்தே போய்விட்டார்
நாராயணன். உலகில் நடக்க கூடாத ஒன்று நடந்துவிட்டிருந்தது. அப்படி என்ன இந்தியாவின்
பொருளாதாரம் ஏற்றம் கண்டுவிட்டதா…அதற்கு கூட இப்படி கலவரப்பட்டிருக்க மாட்டார் மனிதர்.
அவரது முகம் பாதி மறைந்து இருந்தது. அவர் பின்னால் இருக்கும் புதிதாக வாங்கிய சோனி
எல்.யி.டி தொலைக்காட்சி திருமண புகைப்படம், போன வாரம் மனைவியை அடிக்க தூக்கி எறிந்த
பூந்தொட்டி சுவற்றில் அடித்து அதனால் ஏற்பட்ட கறை எல்லாம் தெள்ள தெளிவாக தெரிகிறது.
அதனூடே அவருடைய முகம் மங்கலாய் தெரிகிறது.
எந்த
சண்டாளனாவது போட்டோஷாப்பில் போட்டு நமது ஒப்பாசிட்டியை குறைத்துவிட்டானா ? அல்லது அந்த
சனியன் பிடிச்ச தா?./$%ளி சுப்பு என் மேல் பகை கொண்டு எதாவது பில்லி சூனியம் என்று
அவிழ்த்து விட்டானா ? (சுப்பு நாரயணணின் பரம எதிரி .பல காலமாக இருவருக்கும் பல பிரச்சனைகள்)
அல்லது பகவானில் கலியுக கிருஷ்ண லீலைக்கு நான் தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டேனா?
பல
வித யோசனைகள் மனதில் ஓட அங்கேயே மூர்ச்சையானார் நாராயணன்.
---தொடரும்
சிறப்பு, தொடரட்டும்..
ReplyDelete