அகத்தியன் விட்ட புதுக்கரடி, நல்லமுத்துவின் கதை - பாரதிதாசன்
பக்கங்கள் 34
பாரதிதாசன் தொடர்ந்து திராவிட கொள்கைகள் மீது ஈடுபாடு கொண்டவராக இருந்தார். அதனால் அவரது எழுத்துக்களிலும் அதன் பிரதிபலிப்பு என்பது இருந்துள்ளது. அந்த வகையில் அவர் எழுதிய இரு கதைகள்தான் அகத்தியன் விட்ட புதுக்கரடி மற்றும் நல்லமுத்துவின் கதை
கரடி விடுகிறான் பார் என நாம் கூறுவோம் இல்லையா.. அதனை அடிப்படையாக கொண்டுதான் அகத்தியன் விட்ட புதுக்கரடி கதை அமைந்துள்ளது. அகத்தியன் தான் தமிழுக்கு இலக்கணம் அமைத்ததாகவும் அதனை அவர் சிவப்பெருமானிடம் கொடுத்துவிட்டதாகவும் ஒரு கதை உண்டு.
அதனை தொடர்ந்து அவரது சீடர் தொல்காப்பியர் தமிழுக்கு இலக்கணம் எழுதியாக ஒரு கதை உண்டு.
இப்படியான கரடிகளைதான் பாரதிதாசன் விமர்சிக்கிறார். ஒன்றாக இருந்த தமிழர்கள் மத்தியில் பிராமணியத்தை பரப்ப வந்த முனிதான் அகத்தியன். அகத்தியன் வந்த பிறகு பல அறியாமைகளை அவன் மக்கள் மத்தியில் பரப்புவதாக கதை செல்கிறது.
நல்லமுத்துவின் கதையை பொறுத்தவரை அவன் அப்பா பேச்சுக்கு மறு பேச்சு இல்லை என வாழ்ந்து வருகிறான். அப்பன் பக்கத்து கிராமத்தில் வேறு பெண்ணோடு தொடர்பில் இருந்தப்போதும் அப்பனை மதிக்கிறான். கோபம் ரோசம், நல்லது கெட்டது தெரியாதவனாக இருக்கிறான். இந்த நிலையில் ஹிந்தி எதிர்ப்புக்காக அவன் போராடி ஜெயில் செல்கிறான்.
அங்கு தி.கவை சேர்ந்தவர்களோடு அவனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. அதனை தொடர்ந்து நல்லமுத்து தந்தைக்கு செய்யும் செய்கைகளை வைத்து கதை முடிகிறது.
திராவிட கொள்கைகளை பாரதிதாசன் அதிகமாக போற்றியுள்ளார். அதன் வீச்சம் இந்த 2 கதைகளிலுமே வெளிப்படையாக தெரிகிறது. மேலும் பழமையும், அறியாமையும் ஊறிப்போன அந்த காலக்கட்டத்தில் தி.கவின் தேவையையும் புரிந்துக்கொள்ள முடிகிறது.
Comments
Post a Comment