மாயி-சான்-
ஹிரோசிமாவின் வானம்பாடி
உலகில் மனிதர்களால்
நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற
நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு
தாக்குதல்.
அதுவும் பயன்படுத்துவதற்கு
எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க
மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல்
நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன.
தப்பி பிழைத்தவர்கள்
எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம்.
புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா
விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு
சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார்
என்பதை புத்தகம் விளக்குகிறது.
எப்போதும் இந்த
அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள்
அதிகமாக விவரிக்கப்பட்டிருந்தாலும் கூட உணர்வு ரீதியாக அந்த பேரழிவில் சிக்கிய மனிதர்களின்
நிலையை அவ்வளவாக படிக்க முடியவில்லை. அது இந்த புத்தகத்தின் வழியாகவே எனக்கு கிடைத்தது.
சிறுமியாக இருந்த
மாயி சானின் விரல்கள் அப்போதே தீக்கிரையானதால் அவர் ஒரு கை செயலிழந்தது. தொடர்ந்து
ஏற்பட்ட கதிரியக்க தாக்குதலால் அதற்கு பிறகு மாயி சான் வளரவே இல்லை. சிறுமியாகவே இருந்துவிட்டார்.
ஒரு ஆற்ற முடியாத கண்ணீரை இந்த புத்தகம் பேசுகிறது என்பதை எவ்வளவு விளக்கி சொன்னாலும்
வார்த்தைகளால் விளக்க முடியாது என்றே நினைக்கிறேன்.

Comments
Post a Comment