வன்முறை யார்
மீது நடத்தப்பட்டாலும் அது தவறான விஷயம்தான். இரண்டாம் உலகப்போர் நடந்த காலக்கட்டத்தில்
பல நாடுகளில் கிறுக்கு ராஜாக்களும், அதிபர்களும்தான் ஆட்சியில் இருந்தனர். இதுவே இரண்டாம்
உலகப்போரை சாத்தியப்படுத்தியது எனலாம். அமெரிக்கா, ஜப்பான், ரஷ்யா என்கிற இந்த வரிசையில்
ஜெர்மனியை சேர்ந்த ஹிட்லர்தான் நம்பர் 1.
தன் தேசத்தில்
யூதர்களை அழித்தொழிக்கும் வேலையை ஹிட்லர் பார்த்தப்போது அங்கு யூதர்கள் பட்ட கஷ்டங்களை
ஒரு யூத பெண்ணின் பார்வையில் இருந்து கதை விளக்குகிறது. அவளுக்கு எப்போதுமே சமைப்பது
என்றால் மிகவும் பிடிக்கும்.
உலகம் முழுக்க
உள்ள எல்லா உணவுகளையும் சமைக்க அவளுக்கு ஆசை. ஏனெனில் யூதர்கள் கொல்லப்பட துவங்கியவுடன்
பலரும் காடு மாதிரியான பகுதிகளுக்கு சென்று பதுங்கிவிட்டனர். அவர்கள் சாப்பாடே இல்லாமல்
இரவு வரை காடுகளில் பதுங்கி இருப்பார்கள். இரவு நேரங்களில் நகர்ப்புர குப்பைத்தொட்டிகளை
கிளறி அதில் கிடைப்பவற்றை உண்டு வந்தனர்.
இவளும் இப்படிதான்
வாழ்ந்து வருகிறாள். இவளது பெற்றோர்களும் தம்பியும் ராணுவத்திரிடம் மாட்டி யூத வதை
முகாமுக்கு செல்கின்றனர். அங்கு வரும் யூதர்கள் உடையில் உள்ள பொருட்களை எடுக்கும் வேலையை
அம்மா செய்கிறாள்.
கொலை செய்யப்பட்ட
யூதர்களை புதைக்கும் வேலையை தம்பி செய்கிறான். ஆனால் ஒரு கட்டத்தில் இவர்களுமே கொல்லப்படுகின்றனர்.
ஹிட்லர் இறப்புக்கு பிறகு அவள் ஒரு வீட்டில் சமையல்காரராக பணிப்புரிகிறாள். அங்கு புது
உணவுகளை படைப்பது அவளுக்கு ஆனந்தத்தை ஏற்படுத்துகிறது. அப்போதில் இருந்து அவள் சமைத்துக்கொண்டே
இருக்கிறாள்.
இப்படியாக ஒரு
யூத பெண்ணின் கண்ணோட்டத்தில் இருந்து ஒட்டு மொத்த யூதர்களின் பாடுகளையும் விளக்குகிறது
இந்த கதை

Comments
Post a Comment