உலகில் அனைத்து நாடுகளிலும் பெண்ணடிமைத்தனம் இருந்து வருகிறது. அதற்கு ஆண்களை விட பெண்கள் வலிமைக்குன்றியவர்கள் என்பது ஒரு காரணமாக இருந்தாலும் மதங்களே இந்த அடிமைத்தனத்திற்கு முக்கிய காரணமாக அமைகின்றன.ஒட்டு மொத்த மதங்களையும் நான் குறிப்பிடவில்லை என்றாலும் முக்கியமான மதங்களில் இதை நாம் காணலாம்.
கிருஸ்துவ மதத்தில் பெண்ணடிமைத்தனம் குறித்து எனக்கு பெரிதாக எதுவும் எனக்கு தெரியாமல் போய் இருக்கலாம்.கிருஸ்துவ மதம் அந்தந்த நாட்டுக்கு தகுந்தார்போல் மாறிக்கொள்வதால் எனக்கு தெரியவில்லை.
இஸ்லாம் மதம் குறித்து நான் சொல்லி யாருக்கும் தெரியவேண்டிய அவசியம் இல்லை. பெண்ணடிமைதனத்தின் கோட்டை இஸ்லாம் என யோசிக்காமல் சொல்லலாம். ஆனால் நாம் முக்கியமாக இங்கே அலச வேண்டியது இந்து மதத்தை ஏன் எனில் இந்தியாவில் இந்து மதம் தானே அதிகம் அதனால் இந்து மதத்துக்கே முன்னுரிமை இப்போழுது இந்த கலாச்சாரமும், இந்து மதமும் பெண்களை எப்படி கைப்பொம்மையாக ஆட்டிவைக்கிறது எனப் பார்ப்போம்.
இந்து மதத்தில் பெண்ணடிமைத்தனம்:
இந்து மதத்தில் முதலில் மகாப்பாரதத்திற்கு போவோம். எப்ப பார்த்தாலும் ஊர் ஊராக போய் பெண் தூக்கும் வேலையை கெளரவ தொழிலாய் செய்பவர் பீஷ்மர்.
அம்பை,அம்பிகை,அம்பாலிகா மூன்று பேரையும் கடத்தி வந்து அதில் அம்பை தவிர மீதம் உள்ள 2 பேரையும்
தன் தம்பி விசித்திர வீரியனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார். அந்த பெண்ணுக்கு விசித்திர வீரியனை பிடித்திருக்கா என்பதெல்லாம் கேள்வியே கிடையாது.
திருத்ராஷ்ட்ரனுக்கு கண் பார்வையில்லாத்தால் அவனுக்கும் பெண் கிடைக்காது வழக்கம்போல் பீஷ்மர் காந்தார தேசம் சென்று அங்குள்ள அனைத்தையும் அழித்துவிட்டு காந்தாரியையும் அவள் தம்பி சகுனி யையும் கடத்தி வந்து வழக்கம்போல அந்த பெண்ணிடம் கேள்வியே கேட்காமல் திருத்ராஷ்ட்ரனுக்கு திருமணம் செய்து வைத்துவிடுவார்.
அடுத்து திரெளபதை திரெளபதை யை கடத்தியெல்லாம் வரவில்லை. அர்ச்சுனனுக்கு பேசி முடித்து திருமணம் ஆனாலும் அவள் கர்ணனின் காதலி என்பது வேறு விஷயம்.
“என்னடா தளபதி கதை சொல்லுற” என நீங்கள் கேட்கலாம். இந்த கதையை மணி சார் மாற்றி எடுத்தால் நாம் என்ன செய்வது. சரி மகாபாரதத்துக்கு வருவோம். திரெளபதை அழகில் மயங்கி 5 பேரும்
மனைவியாக வைத்து கொண்ட அந்த நிகழ்வில் இந்து மதத்தின் பெண்ணடிமை தனத்தை நீங்கள் காணலாம்.
பெண்கள் போதை பொருளாக மட்டுமே பார்க்கப்பட்ட நிலை தான் இது.
அடுத்து பகவான் கிருஷ்ணன் அவன் ஒரு PlayBoy என நான் சொல்லவில்லை. கோவில் கோபுர சிற்பங்களில் ஆடையின்றி கிருஷ்ணன் பல பெண்களோடோ ஒரு பெண்ணுடனோ அதுவும் பல விதமான முறையில் உடலுறவு வைத்துள்ளதை செதுக்கியுள்ளனர்.சான்று கெட்போர் மன்னார்குடி பெரிய கோவிலை கோபுரத்தை பார்த்தப்படி 2 சுற்று
சுற்றி வரவும். பல பெண்களுடன் உறவு வைத்து கொண்ட கிருஷ்ணன் போதனை பகவத் கீதை என்னும் புனித நூலாகவும் கிருஷ்ணன் கடவுளாகவும் ஆகிறான். இதுவே ஒரு பெண் Play Girl ஆக இருந்தால் சாமியாக்கி கும்பிடுமா இந்த மதம். ஆண் செய்தால் எதுவும் தவறில்லை என்பதை நியாயபடுத்தவே பொதுவெளியில் கிருஷ்ணன் நிர்வாணமாக வன்புணர்வு செய்துகொண்டிருக்கிறான் அந்த கோவில் சிற்பங்களை
இது சாம்பிள் தான் இன்னும் எவ்வளவோ இருக்கு மகாபாரதத்தில் எனவே சாம்பிளோடு விட்டுட்டு அடுத்து கொஞ்சம் மனு தர்ம சாஸ்த்திரம் பக்கம் போவோம்
ஏன் எனில் இந்தியாவில் பெண்ணடிமை தனம் காலூன்ற காரணமாக இருந்த பிராமணியத்தையும் மனு வையும் குறிப்பிடாமல் நிச்சயம் இந்த கட்டுரையை முடிக்க முடியாது..
மனு தர்மம் பற்றி நிறைய எழுத வேண்டி இருப்பதால் TO BE CONTINUED……..
Comments
Post a Comment