செல்போன், இண்டர்நெட் வந்துச்சு.. இப்ப நாடே நாசமா போச்சு என கூறும் ஒரு குழுவினர் எப்போதும் இருப்பதை பார்க்க முடியும். ஆனால் தொழில்நுட்ப வளர்ச்சியால் நன்மைகள்தான் அதிகமாக இருந்துள்ளன. அப்படி ஒரு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாத காரணத்தால்தான் 2004 சுனாமியில் இப்படி ஒரு அழிவு ஏற்பட்டுள்ளது. மேலும் தெருவிளக்குகள் வந்த பிறகுதான் கிராமங்களில் கள்ள தொடர்புகள் குறைந்ததாக கி.ரா கோபல்ல கிராமம் கதையில் கூறுகிறார். அதுக்கூட தொழில்நுட்பத்தின் ஒரு நன்மைதானே.
இப்போது சுனாமிக்கு வருவோம் Tsunami - Race Against Time என்கிற ஆவணப்படம் ஹாட்ஸ்டாரில் கிடைக்கிறது. சுனாமியை வெறும் இயற்கை பேரிடராக மட்டுமே அணுகிய என்னை போன்றவர்களுக்கு சுனாமி குறித்து கேட்காத பல விஷயங்களை இந்த ஆவணப்படம் கூறுகிறது.
சுனாமியின்போது பாதிக்கப்பட்ட பகுதிகளில் எடுக்கப்பட்ட நிஜ வீடியோக்களை கொண்டே ஒட்டு மொத்த ஆவணப்படமும் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்திய பெருங்கடல் பெரிதாக சுனாமி ஏற்படாத ஒரு பகுதியாக இருந்து வந்தது.
அதனால் சுனாமி எச்சரிக்கை மையங்கள் எதுவுமே இந்திய பெருங்கடல் பகுதியை சேர்ந்த நாடுகளுக்கு அப்போது கிடையாது. இந்த நிலையில்தான் 2004 டிசம்பர் 26 அன்று இந்தோனிஷியாவிற்கு அருகில் மனித வரலாற்றில் காணாத பெரிய நிலநடக்கம் ஏற்படுகிறது.
ரிக்டர் அளவில் 10 என்பது நிலநடுக்கத்தில் மிக அதிக அளவு அப்படியான நிலநடுக்கம் நடந்தால் நிலம் இரண்டாக பிளந்துவிடும். சுனாமியின் போது ஏற்பட்ட நிலநடுக்கத்தின் அளவு 8.9 ரிக்டர் அளவுகள். அவ்வளவு பெரிய நிலநடுக்கத்தை மனித குலம் அதுவரை காணவில்லை.
இந்த நிலநடுக்கத்தால் இரண்டு பெரிய அலைகள் கடலில் உருவாகி ஒன்று இடது பக்கமும் மற்றொன்று வலது பக்கமும் பயணித்தது. இடது பக்கம் வந்த அலைகள் ஸ்ரீ லங்கா இந்தியாவில் துவங்கி கென்யா வரை சென்றது. வலது பக்கம் சென்ற அலைகள் தாய்லாந்து, இந்தோனிசியா, மலேசியா வரை தாக்குதலை நடத்தியது.
மனிதக்குலம் கண்டிராத ஒரு அழிவு. இந்தியா மற்றும் ஸ்ரீ லங்காவில் அப்போது நடந்த அழிவிற்கு தொழில்நுட்ப வளர்ச்சி இல்லாததே காரணமாக இருந்துள்ளது. ஏனெனில் சுனாமி உருவாகி 6 மணி நேரம் கழித்துதான் இந்தியாவை வந்தடைந்துள்ளது.
சுனாமி உருவானப்போதே ஹவாய் தீவுகளில் உள்ள சுனாமி எச்சரிக்கை மையம் அதை கண்டறிந்துள்ளனர். ஆனால் அவர்களால் அதை இந்தியாவிற்கு சொல்ல முடியவில்லை. இந்த பேரழிவுக்கு பிறகு கடலோர நாடுகள் அனைத்தும் சுனாமி எச்சரிக்கை மையத்தை ஏற்படுத்தியுள்ளன.
இதை விட திகிலான ஒரு விஷயம் இந்த ஆவணப்படத்தில் அதிர்ச்சியை கொடுத்தது. சுனாமிக்கு பிறகு இந்தோனிஷியாவுக்கு அருகில் ஒரு சின்ன தீவு மொத்தமாக நிர்மூகமாகிவிட்டது. அங்கு உயிர் பிழைத்தவர்கள் காப்பாற்றப்பட்டு விட்டனர்.
பிறகு 3 வாரங்களுக்கு பிறகு அங்கு புகைப்படம் எடுப்பதற்காக ஒரு சர்வேதேச செய்தி நிறுவனம் அங்கு சென்றப்போது தீவு முழுவதும் பிணங்களாக நிரம்பி இருந்துள்ளது. அதற்கு நடுவே ஒரு 10 வயது சிறுவன் உயிர் பிழைத்து சுற்றியிருக்கிறான்.
அவனால் அவன் தாய் தந்தையரை கண்டறிய முடியவில்லை. அங்கு குப்பையில் கிடைத்த நூடுல்ஸ் மாதிரியான விஷயங்களை உண்டு மூன்று வாரங்களை கழித்துள்ளான். இரவு நேரங்களில் மொத்த தீவும் ஆள் அரவம் இல்லாமல் இருந்ததால் அவன் பயந்து போயுள்ளான். இதனால் தினசரி பிணங்களுடன் படுத்து உறங்கியுள்ளான்.
அவனை மீட்ட காணொளிகளும் இடம் பெற்றுள்ளன. மிக முக்கியமான ஆவணப்படம் மிஸ் பண்ணிடாதீங்க
Comments
Post a Comment