உதிரிப்பூக்கள்
இயக்குனர்: மகேந்திரன்
மகேந்திரனின் ஒரு சில திரைப்படங்களைதான் நான் பார்த்துள்ளேன். கை கொடுக்கும் கை பார்த்தப்போதே ஒரு வியப்பு இருந்தது. தற்சமயம் பார்த்த உதிரிப்பூக்கள் 1979 இல் கண்டிப்பாக ஒரு சிறப்பான திரைப்படம். கதாநாயகனே இல்லாத ஒரு கதை. சுந்தர வடிவேலு என்னும் பண்ணையார். ஒரு சைக்கோத்தனமான மனநிலையை கொண்டவன். அவனை சுற்றிதான் கதை நகர்கிறது
நாம் பலரது வீட்டில் அதிக ஆதிக்க தன்மையுடன் இருக்கும் சில ஆண்களை பார்த்திருப்போம். இது என்ன சாதாரண விஷயம்தானே.. ஆண்கள் ஊரில் இப்படி இருப்பதில்லையா என்பதுதான் பொது மனநிலையாக இருக்கும். ஆனால் அப்படி இருப்பவர்கள் செய்யும் தவறுகள் எவ்வளவு பெரியது என்பதைதான் படத்தின் வழியே பார்க்க முடிகிறது.
தனது மனைவியின் தங்கையை திருமணம் செய்ய ஆசைப்படுகிறான் சுந்தரவடிவேலு. அதற்காக அவன் செய்யும் மோசமான காரியங்களை மையமாக கொண்டு கதை நகர்கிறது. படம் துவங்கி சில நிமிடங்களிலேயே கதாபாத்திர அறிமுகங்கள் சுந்தர வடிவேலு தன் மனைவியின் தங்க சென்பகத்தின் மீது ஆசைப்படுவது எல்லாம் வந்துவிடுகிறது.
மீதம் 2 மணி நேரமும் அவளை அடைய சுந்தரம் செய்யும் விஷயங்களை 1979 காலக்கட்டத்தில் இவ்வளவு விறுவிறுப்பாக காட்டியிருப்பது வியப்புதான். அதற்கு தகுந்தாற் போல படத்தை லெவலை தாண்டி இளையராஜாவின் இசை இருக்கிறது.
படம் முடிந்த பிறகும் “ஏ இந்த பூங்காத்து தாலாட்ட” மற்றும் அழகிய கண்ணே பாடல்கள் மனதை விட்டு நீங்காமல் நின்றுவிடுகிறது. மிக கொடூரமான வில்லன் க்ளைமேக்ஸில் சாக போகிறான். ஒரு வேளை மகேந்திரன் இயக்கவில்லை என்றால் இது அனைவருக்கும் திருப்திகரமான க்ளைமேக்ஸாக இருந்திருக்கும்.
ஆனால் மாறாக க்ளைமேக்ஸில் அவனது இறப்பு அனைவருக்கும் வருத்தத்தை கொடுக்கிறது. மிஸ்கின் சைக்கோ திரைப்படத்தின் க்ளைமேக்ஸில் ஒரு விஷயத்தை செய்ய நினைத்து தவறவிட்டிருந்தார். அதுதான் உதிரி பூக்கள் படத்தில் சரியாக அமைந்துள்ளது.
பொதுவாக ஜப்பான் அனிமே கதைகளில் வில்லன் ஏன் வில்லன் ஆனான் என்கிற பின்கதை மனதை தொடுவதாக இருக்கும். அதனால் வில்லன் இறக்கும்போது பார்ப்பவர் கண்ணீர் வடிக்கும் நிலை ஏற்படும். அந்த ஒரு நிலையை இந்த படத்தில் பார்க்க முடிந்தது.
படம் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது.

Comments
Post a Comment