1877 இல் வெளிவந்து அதிக பிரபலமடைந்த டெட் வுட் டிக் நாவலை மையப்படுத்தி எழுதப்பட்டது இந்த காமிக்ஸ்
டெட் வுட் டிக் ஒரு கறுப்பினத்தை சேர்ந்த கதாநாயகன் ஆவார். அமெரிக்க ராணுவத்தில் இருக்கும் இவர் அவர்களுக்காக ஒரு செவ்விந்தியனை கொலை செய்ய செல்கிறார்கள்.
அந்த சமயத்தில் துவண்டு கிடக்கும் அந்த செவ்விந்தியன் டெட் வுட் டிக்கை பார்த்து உன்னை பார்த்து ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான். ஏன் என டெட் வுட் டிக் கேட்க ஒரு நாயை விட உங்களை இழிவாக நடத்தும் இவர்களுக்காக நீ வேலை பார்க்கிறாயே அதுதான் ஆச்சரியமாக இருக்கிறது என்கிறான் அந்த செவ்விந்தியன்.
அந்த ஒரு வார்த்தை டெட் வுட் டிக்கை பெரிதாக பாதிக்கிறது. அதனை தொடர்ந்து அவன் ராணுவத்தை விட்டு விலகுகிறான். இந்த நிலையில் சாக கிடக்கும் ஒரு முதியவனை பார்க்கிறான் டெட் வுட் டிக். அந்த முதியவர் உயிருடன் இருக்கும்போது பேசும் ஒரு சில விஷயங்களே டெட் வுட் டிக்குக்கும் அந்த முதியவருக்கும் ஆழமான நட்பை உருவாக்குகிறது.
இந்த நிலையில் நான் இறந்துவிட்டால் என்னை ஒரு நல்ல கல்லறையில் புதைக்க வேண்டும் என தனது கடைசி ஆசையை தெரிவிக்கிறார். அதற்கு டெட் வுட் டிக்கும் ஒப்புக்கொள்கிறான். அந்த முதியவரும் கறுப்பினத்தை சேர்ந்தவர். கதை நடக்கும் காலம் கௌபாய் யுகம் என்பதால் நீக்ரோக்களை கல்லறையில் புதைக்க முடியாது என கூறுகின்றனர் வெள்ளையர்கள்.
மேலும் அந்த முதியவரின் பிணத்தை வைத்து அவர்கள் விளையாடி வருகின்றனர். இதனால் கோபமடையும் டெட் வுட் டிக் அந்த கிராமத்தையே அதகளம் செய்ய தனி ஆளாக களம் இறங்குகிறான். அதற்கு பிறகு உள்ள ஆக்ஷன் பேக்தான் இந்த காமிக்ஸ்.
செம மாஸான ஒரு காமிக்ஸ். ஒரு ஆக்ஷன் படம் பார்க்க நினைப்பவர்கள் இந்த காமிக்ஸை கையில் எடுத்தால் அதை விட சிறப்பான ஆக்ஷன் இதில் காத்துக்கொண்டுள்ளது.

Comments
Post a Comment