Skip to main content

இடந்தலைப்பாடு - சேவியர் ராஜதுரை

சிறு வயது முதலே சிறுகதைகள் மீது எனக்கு ஆர்வம் உண்டு. ஆரம்பத்தில் பள்ளிகளில் துணைப்பாடங்களில் படித்தவரை சிறுகதைக்கான இலக்கணம் என்னவென்று எனக்கு புரியவில்லை. பிறகு இலக்கிய வட்டாரத்திற்குள் வந்த பிறகு ஏதோ கடப்பாறையை கொண்டு பாறையை நகர்த்தும் வகையில் சிறுகதைக்குள் கதைக்கரு இருக்க வேண்டும் என நினைத்தேன்.


பிறகு போன வருடம் நிறைய சிறுகதைகளை படித்ததன் விளைவாக சிறுகதைகளுக்கு இலக்கணம் என்றெல்லாம் ஒன்றும் கிடையாது என்பதை ஓரளவு புரிந்துக்கொண்டேன். எது வேண்டுமானாலும் ஒரு சிறுகதையாக இருக்கலாம்.



இரு நபர்கள் பேருந்தில் பேசி கொண்டு வரும் உரையாடல், ஒரு எறும்பின் மனநிலை, தெருவோர பிச்சைக்காரனின் நடவடிக்கை எது வேண்டுமானாலும் சிறுகதையாக மாற்றப்படலாம். பெரும்பாலும் நம் வாழ்க்கையில் நாம் சந்தித்த உணர்ந்த விஷயங்களில் இருந்தே சிறுகதைகள் உருவாகுவதாக நான் நினைக்கிறேன்.


நண்பர் சேவியர் ராஜதுரை எழுதிய இடந்தலைப்பாடு சிறுகதை தொகுப்பும் அப்படியான ஒரு சிறப்பான தொகுப்பாக இருந்தது. இவற்றில் உள்ள சிறுகதைகள் எல்லாம் அவர் தன் வாழ்வில் உணர்ந்த விஷயங்களின் அடிப்படையில் அமைந்திருக்கலாம் என நினைக்கிறேன்.


இவற்றில் ஒரு சில காதல் கதைகள் இருந்தாலும் கூட அவற்றின் கதை அம்சத்தில் மாற்றங்கள் இருக்கின்றன. ஒரு பொது கழிப்பிடத்தின் சூழலையும், செல்லப்பிராணிக்காக கண்ணீர் சிந்தும் மனதையும், சத்துணவு முட்டைக்காக உருவான நட்பையும் இன்னும் பலவற்றையும் தனது கதைகளின் வழியாக நம் மனதிற்குள் கடத்தியுள்ளார் சேவியர்.


ஒரு சிறுகதை என்பது படைப்பாளியின் உருவாக்கமே. அது இப்படி முடிந்திருக்கலாம். க்ளைமேக்ஸ் சரியில்லை போன்ற இடத்திற்குள் எல்லாம் சிறுகதைகளை கொண்டு செல்ல முடியாது.  எனவே நானும் அந்த வட்டத்திற்குள் கதைகளை கொண்டு செல்ல விரும்பவில்லை. இந்த சிறுகதை தொகுப்புகளில் எனக்கு மிக பிடித்த கதைகள் என்றால் பாரா முகம், இடந்தலைப்பாடு, தொடர்புகொள்ளும் வாடிக்கையாளர் ஆகிய கதைகள்.


எழுத்தாளர் சேவியர் சகோவிடம் வைக்கும் கோரிக்கை எல்லாம் புதுமைப்பித்தன் போல பலதரப்பட்ட மக்களின் கதைகளையும், உங்கள் நிலம் சார்ந்த விஷயங்களையும் இன்னமும் சிறுகதைகள் மூலம் வெளிப்படுத்தவும். நல்ல வாசிப்பு அனுபவத்தை கொடுத்த புத்தகம் இடந்தலைப்பாடு…


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...