Skip to main content

ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு - Book Review

 ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு

ஹரிஹரசுதன் தங்கவேலு

பக்கங்கள்: 191

கடந்த சில ஆண்டுகளில் மட்டும் ஏ.ஐயின் வளர்ச்சி என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்கள் சில மணி நேரங்களில் செய்யும் அறிவு சார்ந்த நிறைய வேலைகளை ஏ.ஐ சில நிமிடங்களில் செய்ய துவங்கியது முதலே ஏ.ஐ மீது மனிதர்களுக்கு இருக்கும் ஈடுபாடு என்பது அதிகரிக்க துவங்கியது.



நிறைய டெவலப்பர்களே கூட ஏ.ஐ மனிதர்களின் ப்ரோகிராம் என்பதை மறந்து மனிதனுக்கு போட்டியாகவும் ஏதோ உயிருள்ள ஜீவராசி போலவும் அதை நினைக்க துவங்கியுள்ளனர். எவ்வளவிற்கு ஏ.ஐ யில் நன்மைகள் இருக்கிறதோ அதே அளவில் தீமைகளும் உண்டு. எல்லா விஷயத்திலுமே உலகில் நன்மை என இருந்தால் தீமையும் இருக்கும். தீமையிலும் சில நன்மைகள் இருக்கும்.

அந்த வகையில் ஏ.ஐ வளர்ச்சியில் டீப் ஃபேக் மாதிரியான பல விஷயங்கள் மக்களுக்கு என்னவென்று கூட விளங்குவதில்லை. மேலும் அது பெரும் அச்சுறுத்தலாகவும் இருக்கிறது. இப்படியான நிலையில் ஏ.ஐ குறித்து அவர்களுக்கு குறைந்த பட்ச அறிவையாவது கொடுப்பதன் மூலம் அவர்களை இந்த மாதிரியான மோசமான விளைவுகளில் இருந்து காப்பாற்ற உதவும்.

தமிழில் தொழில்நுட்பம் சார்ந்தே குறைவான அளவில் புத்தகம் வருகிற நிலையில் ஏ.ஐ குறித்து எப்படி இப்படியான புத்தகம் வரும் என நினைத்திருந்த நிலையில்தான் ஏ.ஐ எனும் ஏழாம் அறிவு புத்தகம் வெளியானது. ஆனால் முன்பு சொன்னது போல ஏ.ஐ குறித்த விழிப்புணர்வை அறிவை பொது சனத்துக்கு இது வழங்குகிறதா? என்றால் நிச்சயமாக இது அப்படியான ஒரு புத்தகம் இல்லை.

ஏ.ஐ குறித்த ஒரு வரலாற்று நூலாக மட்டுமே இந்த புத்தகம் வெளி வந்துள்ளது. ஏ.ஐ ஏதோ இப்போது வந்ததாக பலரும் நினைத்து கொண்டிருக்கும்போது அது இரண்டாம் உலகப்போர் காலக்கட்டத்திலேயே உருவாக்கப்பட்டதில் இருந்து ஏ.ஐயின் வரலாறு துவங்குகிறது.

ஆலன் ட்யூரிங் என்கிற மகத்தான விஞ்ஞானியின் கண்டுப்பிடிப்புதான் ஏ.ஐக்கு அச்சாணி. அதனை தொடர்ந்து ஏ.ஐ என்ன மாதிரியான முன்னேற்றத்தை கண்டது என்ன மாதிரியான கண்டுப்பிடிப்புகள் நிகழ்ந்தன போன்ற அனைத்து தரவுகளையுமே சிறப்பாக வரிசைப்படுத்தி இருக்கின்றனர். 

மேலும் ஏ.ஐ வளர்ச்சியை பொறுத்தவரை அதன் நிலை இப்போது எந்த ஸ்டேஜில் உள்ளது. எதிர்காலத்தில் ஏ.ஐயின் வளர்ச்சி எப்படியிருக்கும் என்பதையும் புத்தகம் எடுத்துரைக்கிறது.

ஒரு வரலாற்று புத்தகமாக இது ஓரளவு சரியான புத்தகம்தான்.




ஆனால் புத்தகத்தின் அட்டையிலேயே இதை குறிப்பிட்டு இருக்கலாம். ஏனெனில் ஹரிஹரசுதன் மாதிரியான துறை சார்ந்த ஆள் எழுதும்போது ஏ.ஐ பயன்பாடு குறித்து தொழில்நுட்ப ரீதியான ஒரு புத்தகமாக இது இருக்கும் என்றே எதிர்பார்த்து வாங்கினேன்.

ஆனால் புத்தகத்தில் முதல் பாதி முழுக்கவே இரண்டாம் உலகப்போர் மற்றும் ஆலன் ட்யூரிங் குறித்தே சென்று கொண்டுள்ளது. அவ்வளவு பக்கங்களுக்கு விளக்கி எழுத வேண்டிய தேவையில்லை. சுருக்கமாகவே அதை எழுதியிருக்கலாம்.

ஏ.ஐ நம்மிடம் என்ன மாதிரியான தகவல்களை திருடுகின்றன. ஏ.ஐ பற்றி தெரியாமல் அதை பயன்படுத்துபவர்கள் எந்த வகையில் ஏ.ஐயிடம் விழிப்புணர்வாக இருக்க வேண்டும். போன்ற விழிப்புணர்வு விஷயங்கள் அவ்வளவாக புத்தகத்தில் இடம் பெறவில்லை.

டீஃப் ஃபேக் என்பது ஏ.ஐ தொழில்நுட்பத்தில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கிறது. ஓப்பன் சோர்ஸாக அதற்கான மாடல்கள் கிடைக்கின்றன. அவை குறித்து புத்தகத்தில் பேசப்பட்டிருந்தாலும் கூட இன்னமுமே விரிவாக பேசப்பட்டிருக்கலாம் என தோன்றுகிறது.

இதனால் இந்த புத்தகம் நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை என்றுதான் கூற வேண்டும். இதன் மூலம் சொல்ல வருவது என்னவென்றால் இது ஏ.ஐ வரலாறு மற்றும் இரண்டாம் உலகப்போரில் ஆலன் ட்யூரிங்கின் பங்கு ஆகியவற்றை விளக்கும் புத்தகம்தானே தவிர ஏ.ஐ குறித்த தொழில்நுட்பம் சார்ந்த புத்தகம் இல்லை.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...