Skip to main content

குருதியில் பூத்த குறிஞ்சி மலர் Comics Review

 குருதியில் பூத்த குறிஞ்சி மலர்.

காமிக்ஸ்

பக்கங்கள்: 66

எல்லா காலங்களிலும் நாகரிகத்தை வளர்க்கிறேன் என்கிற பெயரில் நாகரிக குடிகள் என்று தங்களை பறைசாற்றி கொள்ளும் விவசாய குடிகள் பல பழங்குடிகளை அழித்துதான் தங்கள் நாகரிகத்தை வளர்த்துள்ளது. இந்திய மலைவாழ் மக்கள், சீனத்தில் மங்கோலியர்கள் அமெரிக்காவில் செவ்விந்தியர்கள் என இந்த லிஸ்ட் மொத்த உலகத்தையும் ஒரு சுத்து சுத்தி வரும். ஆனால் இதற்கெல்லாம் ஆதி இந்த இன வெறி மட்டுமே.



அமெரிக்கர்களும் சரி அவர்களுக்கு முன்பு அமெரிக்காவை ஆக்கிரமிப்பில் வைத்திருந்த பிரிட்டிஷாரும் சரி. வெகு காலங்களாகவே செவ்விந்தியர்களை மிக மோசமாகவே நடத்தி வந்திருக்கின்றனர். ஆரம்பத்தில் இருந்தே செவ்விந்தியர்கள் வெள்ளையர்களுக்கு அடங்கி போகவில்லை.

மேலும் செவ்விந்தியர்கள் காட்டு மக்களாக இருப்பதாலும், இங்கிலாந்து காரர்களுக்கு உலகிலேயே தான் மட்டுமே தூய்மையான இனம் என்கிற பம்மாத்தும் இருக்கிறதால் அவர்கள் செவ்விந்திய கிராமங்களை எரிப்பது செவ்விந்திய பெண்களை நாசம் செய்வது போன்றவற்றை பொழுது போக்காகவே செய்து வந்தனர்.

உலகிலேயே அதிகப்படியான காட்டுமிராண்டி தனங்களை செய்தப்போதும் இன்னமும் தாங்கள்தான் உயர்ந்த இனம் என்கிற இருமாப்பு அடங்கிய பாடில்லை. செவ்விந்தியர்கள் சும்மா வாங்கி கொண்டு மட்டும் இருக்கும் ரகம் அல்ல. பதிலுக்கு அவர்களும் நிறைய செய்கை செய்திருக்கின்றனர்.

ஆனால் வெள்ளையர்கள் செய்த நாசங்களோடு ஓப்பிட்டு பார்த்தால் இவர்கள் செய்த நாசங்கள் ஒரு சதவீதமாவது இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் சமூக வளர்ச்சிக்கு பிறகு வெள்ளையர்களால் தாங்கள் செய்த பிழைகள் மீது மண்ணை போட்டு மறைக்க முடியவில்லை. இதனால் செவ்விந்திய மக்களுக்கு பிறகு ஆதரவாக உலகம் முழுக்க குரல்கள் எழுந்தன. 

அவர்களுக்கு ஆதரவாக வந்த இலக்கியங்களில் காமிக்ஸ் முக்கியமானது. வைல்ட் வெஸ்ட் கதை களங்களை கொண்டு வரும் காமிக்ஸ்களில் பெரும்பாலும் செவ்விந்தியர்கள் இருப்பார்கள். இதில் செவ்விந்தியர்களுக்கு ஆதரவான கருத்துக்களை கொண்ட காமிக்ஸ்களும் உண்டு.

அவர்களை வில்லனாக காட்டும் காமிக்ஸ்களும் உண்டு. அப்படி அவர்களை வில்லனாக சித்தரித்து வந்த ஒரு காமிக்ஸ்தான் இந்த குருதியில் பூத்த குறிஞ்சி மலர் புத்தகம். செவ்விந்தியர்களுக்கு இவ்வளவு செய்கை செஞ்சிட்டு இன்னமும் அவர்களை வில்லனாக காட்டி வெள்ளையர்கள் தங்களை நல்லவர்களாக காட்டுவது ஏற்புடையதாக இல்லை.

ஆனால் காமிக்ஸின் வேலைபாடுகள்தான் சிறப்பான சம்பவம். ஆர்ட் ஒர்க் அனைத்தும் கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு சிறப்பாக இருந்தது. கதை முழுக்க வைபரண்ட் கலர்ஸ் எதுவும் பயன்படுத்தாமல் ஒரு டார்க் டோனிலேயே கொண்டு சென்றனர்.

கதாபாத்திரங்களும் பெருசாக சிரித்து பார்க்க முடியவில்லை. ஆர்ட் ஒர்க்குக்காக வாங்கலாம்..


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...