Skip to main content

குமஸ்தாவின் பெண் - அறிஞர் அண்ணா

குமஸ்தாவின் பெண்

அறிஞர் அண்ணா

ஆண்கள் பெண்ணியம் பேசுறதுங்குறது பூனை எலிக்கு பரிந்து பேசுற மாதிரினு பெரியார் சொன்னதா சொல்லுவாங்க. அவர் சொன்னாரா இல்லையானு தெரியலை. ஆனால் இந்த புத்தகத்தை அண்ணா எழுதியிருந்த விதம் அப்படிதான் இருந்தது. தமிழ் சினிமாவிலும் சரி இலக்கியவாதிகள் இடத்திலும் சரி கற்பு தவறிய பெண்ணின் எண்ட் கார்டு என்பது அழுகாச்சியாகதான் முடிய வேண்டும் என்பது எழுதப்படாத விதி.

ஏற்கனவே செம்மீன் நாவலில் தகழி சிவசங்கரபிள்ளையும் இதே வேலையைதான் பார்த்து வைத்திருப்பார். ஒரு பெண் ஏதோ ஒரு காரணத்துக்காக திருமணத்திற்கு பிறகு உறவு என செல்லும்போது அதிலும் குமஸ்தாவின் மகளிடம் எந்த ஒரு தவறுமே காணப்படவில்லை.



தனது கணவனுக்கு துரோகம் கூட செய்யாத ஒரு கதாபாத்திரம் என்றுதான் கூற வேண்டும். வயதான நபருடன் திருமணம் ஆனாலும் கூட அவர் இறந்த பிறகுதான் அவள் பணக்காரர் ஒருவருடன் உறவில் செல்கிறார். அதுவும் அவருக்கு வைப்பாட்டியாக இருப்பதன் மூலம் குடும்பத்தின் ஏழ்மையை சரி செய்ய முடியும் என்கிற நோக்கத்திற்காகவே செல்கிறாள். பிறகு அந்த பணக்கார வாழ்க்கை அவளுக்கு பிடித்து மோசமானவளாக மாறுகிறாள் குமஸ்தாவின் மகள்.

இந்த இடத்தில்தான் கதையில் சிக்கல். இந்த பெண்ணின் கதாபாத்திரத்தை வடிவமைக்கும்போதே மிக மோசமான அறிஞர் அண்ணா வடிவமைத்தது எதற்கென்று விளங்கவில்லை. அவள் வீட்டுக்கு எதிரில் உள்ள ஒரு ஆண் மீது அவளுக்கு காதல் வருகிறது. சோமு என்கிற அந்த கதாபாத்திரம் மிக அழகானவனாக இருந்ததே அதற்கு காரணமாக இருக்கிறது. காதல் என்பதை விடவும் அவன் மீது அளவுக்கடந்த மோகம் கொண்டவளாக அந்த பெண் சித்தரிக்கப்படுகிறாள்.

அப்போதைய சமூக சூழலில் ஒரு பெண் அழகிய ஆண் மீது காமம் கொள்வது பெரும் பிழை என இருந்ததால் அண்ணா அப்படியாக எழுதினார் என்று வைத்து கொண்டாலும் அதை காதலில் ஏன் சேர்க்க வேண்டும். அதே சோமு காந்தா(கதாநாயகி) மிராசுதாரருக்கு வைப்பாட்டி ஆன பிறகு அவளை காண வருகிறான். அவனுக்கு ஏற்கனவே திருமணம் ஆகியுள்ளது. 

ஆனாலும் கூட மிராசுதாரருக்கு தெரியாமல் அவனை ஆசை நாயகனாக வைத்துகொள்கிறாள் காந்தா. தனது மனைவியின் நகையை எல்லாம் விற்று சோமு காசு கொண்டு வந்து கொடுக்கும்போது கூட அதை காந்தா தயக்கமின்றி பெற்றுகொள்கிறாள். ஆக அண்ணா காந்தாவை உருவகப்படுத்தும் விதத்திலேயே பிரச்சனை இருக்கிறது.

வழக்கம் போல இறுதியில் இலவு கூட்டி கதை முடிகிறது. இதில் என்ன புரட்சியை அண்ணா புகுத்த நினைத்தார் என்பது மட்டும் விளங்கவே இல்லை. பெண்ணியம் சார்ந்து எழுதுவதில் பிரபஞ்சனுக்கு இருக்கும் தெளிவு அண்ணாவுக்கு இல்லையோ என தோன்ற வைக்கிறது இந்த நாவல்.

மேலும் கதை களங்கள் அப்போது வந்த ஆங்கில க்ரைம் கதைகளின் இன்ஸ்ப்ரேஸனாக பண்ணியிருப்பது தெரிகிறது. இன்சூரன்ஸ் பற்றியே தமிழகத்தில் ஒன்றும் தெரியாத காலத்தில் இன்சூரன்ஸ்க்காக கொலை, பூவில் சைனைடு வைப்பது என பலவும் அங்கிருந்து தூக்கி வந்த கண்டெண்ட் போல தெரிகிறது.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...