வியாசனை அறிதல்
ஜெயமோகன்
உலகம் முழுக்க
இருக்கும் ஒவ்வொரு நாடுகளிலும் புராண கதைகள் என்று ஒன்று இருக்கும். அப்படியாக இந்தியாவில்
முக்கியமான புராண கதையாக இருந்து வருவது மகாபாரதம். எப்படி இப்படி ஒரு கதையாடல் பல
வருடங்களுக்கு முன்பே நடந்துள்ளது என நினைக்கும் அளவிற்கு மனித உணர்ச்சிகள் மீது விளையாடும்
ஒரு இலக்கியம்.
ஹாலிவுட்டில்
வந்த கேம் ஆஃப் த்ரோன்ஸ் கதையை விடவும் ஆட்சி அதிகாரத்திற்காக நடக்கும் மோசமான விளைவுகளை
மகாபாரதம் வெளிச்சம் போட்டு காட்டும். மகாபாரதத்தை எழுதியவராக கருதப்படும் கிருஷ்ண
துவைபாயனார் வியாசர் என்பவரை பற்றி ஜெயமோகனின் பார்வையில் இருந்து இந்த புத்தகம் செல்கிறது.
என்னை பொறுத்தவரை
மகாபாரதத்தை விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புராணமாகவும் தெய்வ கதையாகவும் மாற்றியதே
அந்த கதை விரிவாக வரவேற்பை பெற முடியாமல் போனதற்கு காரணமாக அமைந்தது என நினைக்கிறேன்.
கௌரவன் புத்தகத்தை எழுதிய ஆனந்த் நீலகண்டன் அந்த புத்தகத்தில் கூறும்போதும் கூட மகாபாரதத்தை
படிப்பவர்கள் அதில் பிழையென கண்டறியும் விஷயங்கள் அப்போது எழுதியவர்களுக்கு தெரியாமலா
இருந்திருக்கும். என்கிறார்.
இருந்தும் அவை
அப்படியே எழுதப்பட்டதற்கு காரணம் அதை மக்கள் விமர்சிக்க வேண்டும். அதை பற்றி பேச வேண்டும்
போர் என போற்றப்படும் கிருஷ்ணனிடத்தில் கூட எப்படியான விளைவுகளை கொண்டு வருகிறது என்பதை
வெளிப்படைதன்மையுடன் மகாபாரதம் பேசுகிறது.
உண்மையில் நியாயம்
தர்மம் என பார்த்தோம் என்றால் துரியோதனனில் துவங்கி, கிருஷ்ணன், ஏகலைவன், அர்ஜுனன்,
தருமன், சகுனி என ஒவ்வொருவருக்கும் ஒரு நியாயமும் ஒரு தருமமும் உள்ள கதையாகதான் மகாபாரதம்
இருக்கும்.
அவரவர் கதையில்
அவர் கதாநாயகனாக இருப்பார். உதாரணத்திற்கு சகுனியை எடுத்துக்கொண்டால் தன் தேசத்தை சூரையாண்டு
தன் அக்காவை நிர்பந்தப்படுத்தி திருமணம் செய்து வைத்த அஸ்தினாபுரத்தையும் பீஸ்மரையும்
அழிப்பதுதான் அவரது வாழ்நாள் கனவு. அவருடைய பழி வாங்கலுக்கு பின்னால் கூட ஒரு நியாயமான
காரணம் இருக்கும்.
அதே போல கிருஷ்ணனை
பொறுத்தவரை அத்தை பசங்களை எப்படியாவது போரில் ஜெயிக்க வைக்க வேண்டும் அதுவே தருமம்
, எத்தனை விலை கொடுத்தாவது அஸ்தினாபுரத்தை அவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இப்படி ஒவ்வொருவருக்கும்
ஒரு நியாயம் ஒரு தருமம் கதையில் இருக்கும்.
ஜெயமோகனை பொறுத்தவரை
அவர் 25 வருடங்களுக்கு மேலாக மகாபாரதத்தை ஆராய்ந்து வெண்முரசு என்கிற பெரும் இலக்கியம்
ஒன்றை கொடுத்துள்ளார். தமிழ் இலக்கிய வரலாற்றில் ஜெயமோகனின் இந்த படைப்பு என்பது உண்மையிலேயே
இமாலய முயற்சிதான்.
இதனால் ஜெயமோகன்
மகாபாரதத்திற்கு மிகப்பெரிய காதலன் ஆகிவிட்டார். மகாபாரதம் ஒரே ஒருவர் எழுதி உருவான
படைப்பாக இருக்க முடியாது, அப்படியே இருந்தாலும் அப்போது இருந்த நாட்டார் கதைகளின்
தாக்கம் மகாபாரதத்தில் இருக்கும். பூதத்திடம் சிக்கும் பாண்டவர்கள், சூதில் தோற்கும்
தருமன் மாதிரியான பல கதைகள் நீதி நெறி கதைகளாகவோ நாட்டார் வழக்கு கதைகளாகவோ அப்போது
இருந்திருக்கலாம்.
அப்போது இந்த
கதையை எழுதியவர்கள் அவற்றை எல்லாம் மகாபாரதத்தில் சேர்த்திருக்கலாம் என்கிற அனுமானம்
எனக்கு உண்டு. கிட்டத்தட்ட ஜெயமோகனுக்கும் கூட அப்படியான எண்ணம் இருப்பதை தெரிவித்துள்ளார்.
அதே போல மகாபாரதத்தில் பின் சேர்க்கை பற்றியும் அவர் பேசியுள்ளார்.
மேலும் மகாபாரதம்
குறித்த கேள்விகளுக்கு பதில்களும் அளித்துள்ளார்.
மகாபாரத கதைகளில்
எனக்கு கௌரவன் மிக பிடித்தமான நாவல். ஏனெனில் பெரும்பாலும் மகாபாரதம் திரைப்படங்களில்
துவங்கி சீரியல் வரை ஜெயமோகன் சொன்னது போல சில்லரை தனம்தான் செய்து வருகின்றனர்.
அதிலிருந்து
வித்தியாசமாக கௌரவர்களின் பார்வையின் வழியே மகாபாரதத்தை கொண்டு செல்லும் கதை கௌரவன்.
அதே போல இன்னமும் நிறைய வெர்ஷன்களில் மகாபாரதம் இருக்கிறது. அவையாவையும் படிக்க வேண்டும்.
Comments
Post a Comment