Skip to main content

வேடிக்கை பார்ப்பவன் - நா.முத்துக்குமார்

 

வேடிக்கை பார்ப்பவன்

நா.முத்துக்குமார்

வாழ்க்கை முழுக்க எதையோ தேடி எது எதுக்கோ ஓடின பிறகு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் நாம் ரசித்து வாழ்ந்தோமா என தெரியாது. வாழ்க்கையை ரசித்து அதனை வேடிக்கை பார்த்து வாழ தெரிந்தவர்கள் இப்பூவழகில் சொற்பமானவர்களே

அப்படியானவர்களில் ஒருவர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமார் தன் கண்ணால் பார்த்த அனுபவித்த உலகை புத்தகத்தின் வழியாக நமக்கு தெரிவிக்கிறார். நா முத்துக்குமாரின் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள்தான் இந்த புத்தகம்.



நா முத்துக்குமார் கவிஞனாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவரின் தந்தை ஒரு அரசு பள்ளி ஆசிரியர். தன் வருமானத்தில் அதிகமாக புத்தகங்கள் மட்டுமே வாங்கி வாழ்ந்து வந்தவர்தான் நா முத்துக்குமாரின் தந்தை. நா முத்துக்குமார் இப்படி ஒரு கவிஞனாக மாற காரணமாக இருந்தவர் அவரே.

ஒரு சமயம் நா முத்துக்குமார் தன் தந்தையிடம் ஏன் நாம் ஓட்டு வீட்டில் இருக்கிறோம். இதனால் என் நண்பர்களை கூட என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை என கூறுவார். அதற்கு அவரது தந்தை நீ உன் நண்பர்களை இரவு வேளையில் அழைத்து வா நம் வீட்டில் வீட்டுக்குள் இருந்தே நட்சரத்திரங்களை பார்க்க முடியும். அதை அவர்களால் அவர்கள் வீட்டில் செய்ய முடியாது அல்லவா? என கூறுவார்.

தனது தந்தையை முன்னுதாரணமாக கொண்டுதான் நா முத்துக்குமார் ஒரு சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என நினைத்தார். உலகம் முழுக்கவே பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாகும் வரை பணத்தை நோக்கி ஓடு என்பதுதான் வேத வாக்காக இருக்கிறது.

அதிலிருந்து வாழ பழகிய ஒரு சில மனிதர்களில் நா முத்துக்குமாரும் ஒருவர். அதற்கு காரணமாக இருந்தவர் அவரது தந்தை. சிறு வயது முதல் சினிமாவிற்கு வந்தது முதல் 30 சாப்டர்களை கொண்டுள்ளது இந்த புத்தகம். எவ்வளவோ நெருக்கடிக்கு நடுவிலும் ஒரு குருவியின் கூவலையும், தவளை சத்ததையும் மழையில் சென்று நனைவோரையும் நான் கண்டதுண்டு. இன்னமும் வாழ்க்கையை ரசிப்பவர்கள் இருக்கதான் செய்கிறார்கள். நா முத்துக்குமார் போல.

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...