வேடிக்கை பார்ப்பவன்
நா.முத்துக்குமார்
வாழ்க்கை முழுக்க
எதையோ தேடி எது எதுக்கோ ஓடின பிறகு நம்ம வாழ்க்கையை திரும்பி பார்த்தால் அதில் நாம்
ரசித்து வாழ்ந்தோமா என தெரியாது. வாழ்க்கையை ரசித்து அதனை வேடிக்கை பார்த்து வாழ தெரிந்தவர்கள்
இப்பூவழகில் சொற்பமானவர்களே
அப்படியானவர்களில்
ஒருவர் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமார் தன் கண்ணால் பார்த்த அனுபவித்த உலகை புத்தகத்தின்
வழியாக நமக்கு தெரிவிக்கிறார். நா முத்துக்குமாரின் வாழ்க்கையில் நடந்த சில தருணங்கள்தான்
இந்த புத்தகம்.
நா முத்துக்குமார்
கவிஞனாக உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் அவரது தந்தை. அவரின் தந்தை ஒரு அரசு பள்ளி
ஆசிரியர். தன் வருமானத்தில் அதிகமாக புத்தகங்கள் மட்டுமே வாங்கி வாழ்ந்து வந்தவர்தான்
நா முத்துக்குமாரின் தந்தை. நா முத்துக்குமார் இப்படி ஒரு கவிஞனாக மாற காரணமாக இருந்தவர்
அவரே.
ஒரு சமயம் நா
முத்துக்குமார் தன் தந்தையிடம் ஏன் நாம் ஓட்டு வீட்டில் இருக்கிறோம். இதனால் என் நண்பர்களை
கூட என்னால் இங்கு அழைத்து வர முடியவில்லை என கூறுவார். அதற்கு அவரது தந்தை நீ உன்
நண்பர்களை இரவு வேளையில் அழைத்து வா நம் வீட்டில் வீட்டுக்குள் இருந்தே நட்சரத்திரங்களை
பார்க்க முடியும். அதை அவர்களால் அவர்கள் வீட்டில் செய்ய முடியாது அல்லவா? என கூறுவார்.
தனது தந்தையை
முன்னுதாரணமாக கொண்டுதான் நா முத்துக்குமார் ஒரு சிறந்த தந்தையாக இருக்க வேண்டும் என
நினைத்தார். உலகம் முழுக்கவே பணம் சம்பாதிக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாகும்
வரை பணத்தை நோக்கி ஓடு என்பதுதான் வேத வாக்காக இருக்கிறது.
அதிலிருந்து
வாழ பழகிய ஒரு சில மனிதர்களில் நா முத்துக்குமாரும் ஒருவர். அதற்கு காரணமாக இருந்தவர்
அவரது தந்தை. சிறு வயது முதல் சினிமாவிற்கு வந்தது முதல் 30 சாப்டர்களை கொண்டுள்ளது
இந்த புத்தகம். எவ்வளவோ நெருக்கடிக்கு நடுவிலும் ஒரு குருவியின் கூவலையும், தவளை சத்ததையும்
மழையில் சென்று நனைவோரையும் நான் கண்டதுண்டு. இன்னமும் வாழ்க்கையை ரசிப்பவர்கள் இருக்கதான்
செய்கிறார்கள். நா முத்துக்குமார் போல.

Comments
Post a Comment