மலேசிய எழுத்தாளர்
ம.நவீனின் முதல் நாவல் பேய்ச்சி. இதற்கு முன்பே இவரது சிறுகதை தொகுப்பான வேப்டியான்
புத்தகத்தை படித்துள்ளேன். அப்போதே இவரது கதைகள் மீது ஒரு ஆர்வம் ஏற்பட்டது. அந்த வகையில்தான்
பேய்ச்சியை படிக்க ஆசைப்பட்டேன்.
சமீபத்தில்
நண்பர் ஒருவர் புத்தகம் வாங்கி தருகிறேன் என கூறியப்போது பேய்ச்சியை வாங்கி கேட்டேன்.
நான் ஒரு நாட்டார் வழக்கியல் குலசாமி கதையை எதிர்பார்த்துதான் பேய்ச்சியை வாங்கினேன்.
ஆனால் புத்தகத்தில் மலேசியாவில் தடை செய்ப்பட்ட புத்தகம் என எழுதியிருந்தது கொஞ்சம்
நெருடலாக இருந்தது.
ஆனால் எதிர்பார்த்ததுக்கு
மேல் வேற ஒரு விஷயத்தை பேய்ச்சி செய்தது. இரவில் தூக்கம் வருமா என்பதே சந்தேகம்தான்.
எந்த ஒரு சாமி கதையிலும் பேய் கதையிலும் காணாத ஒரு உக்கிரமும் கதை போக்கும் கொண்ட கதை
பேய்ச்சி.
ஆரம்பத்தில்
வழக்கமான தமிழ்நாட்டு கிராமத்தில் இருந்தே கதை துவங்குகிறது. கொப்பேரன் எனும் மருத்துவர்
சாந்தமான பேச்சி சிலையை வைத்து வணங்கி வருகிறார். ஒரு நாள் ஆட்டுகிடாயை பழி கொடுக்கும்போது
கிடாய் தப்பிக்கிறது. அன்று ஒரு அழகிய பெண் வயிற்று வழி காரணமாக கொப்பேரனை பார்க்க
வருகிறார். அந்த பெண் தங்கி சிகிச்சை பெரும்போது கொப்பேரனுக்கு அந்த பெண் மீது ஈடுபாடு
எழவே அவளிடமும் பேச்சியிடமும் விருப்பம் கேட்டு அவளை திருமணம் செய்கிறார்.
ஆனால் திருமணம்
ஆன நாள் முதல் இருமுறை கருத்தரித்து பிறந்து சரியாக 16 ஆவது நாள் இறந்துவிடுகிறது.
இது ஏன் என தெரியாமல் மருந்து தேடி தன்னுடைய மனைவி ஊருக்கு செல்கிறார். அங்கு அவரது
மனைவியை யாருக்குமே தெரியவில்லை. பிறகுதான் வந்தது பெண் அல்ல. பேச்சுதான் அவள்தான்
தன் குழந்தைகளை பலி வாங்கி கொண்டிருக்கிறாள் என தெரிகிறது.
அடுத்து பிறக்கும்
குழந்தையை காப்பாற்றி கொண்டு மலேசியா செல்கிறார் கொப்பேரன். பிறகு கதை முழுக்க மலேசியாவில்தான்
நடக்கிறது. அதற்கு பிறகு மூன்று தலைமுறை கழித்து நடக்கும் கதைதான் மலேசியாவில் நடக்கும்
கதையாக இருக்கிறது
பேய்ச்சி என்பவளை
இந்த நாவல் ஏதோ திடீரென வரும் தெய்வமாக வர்ணிக்கவில்லை. பேய்ச்சி எங்கும் இருப்பாள்.
சமயத்தில் ஒரு வண்ணத்து பூச்சியாக, ஒரு பாம்பாக, ஒரு கல்லாக கூட பேய்ச்சி வருவாள்.
அதே போல உக்கிரம் கூடிய எந்த ஒரு பெண்ணின் உடல் வழியாகவும் வந்து பேய்ச்சி செய்ய வேண்டியதை
செய்துவிடுவாள்.
எனவே இதில்
பேய்ச்சி என நாம் எதை நினைக்கிறோமோ அதுதான் கதையில் பேய்ச்சி. அது பேயாகவும் இருக்கலாம்.
தெய்வமாகவும் இருக்கலாம். கதை முழுக்கவே பேய்ச்சியால் இறப்பவர்கள் அனைவரும் பெரும்
பாவம் செய்தவர்களாகவே இருக்கின்றனர். முக்கியமாக பெண்ணுக்கு அநீதி இழைத்தவர்களாக இருக்கின்றனர்.
இந்த கதை ஏன்
மலேசியாவில் தடை செய்யப்பட்டது என்றால் மலேசியாவில் புலம் பெயர்ந்து போன தமிழர்கள்
அப்போது அங்கு பண்ணை அடிமைகளாகதான் பணிப்புரிந்து வந்தனர். அவர்களுடைய வாழ்க்கையை ஒரு பக்கம் இந்த புத்தகம் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.
இதனாலேயே இந்த புத்தகம் முக்கியமாக மலேசியாவில் தடை செய்யப்பட்டுள்ளது.
எப்படி இருந்தாலும்
படிப்பதற்கு ஒரு தரமான புத்தகம் பேய்ச்சி
Comments
Post a Comment