Skip to main content

ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசங்கள்

 

ஷெர்லாக் ஹோம்ஸின் சாகசங்கள்

முதலாம் பாகம்

சர் ஆர்தர் காணன் டாயில்

தமிழில்: சந்திரசேகரன்

1887 இல் கிட்டத்தட்ட 130 வருடங்களுக்கு முன்பு எழுதப்பட்ட துப்பறியும் கதை. துப்பறியும் கதைகளுக்கு எல்லாம் குரு என இதை கூறலாம். இலண்டன் நகரில் உள்ள ஒரு தனியார் துப்பறியும் அமைப்பை கொண்டவர்தான் ஷெர்லாக் ஹோம்ஸ்.

எந்த ஒரு குற்றத்தையும் எளிதாக அடையாளம் காணக்கூடிய நுண்ணறிவை கொண்ட ஒரு கதாபாத்திரம். மொத்த உலகமும் கொண்டாடி தீர்த்த கதை. அப்போதே பலர் உண்மையிலேயே ஷெர்லாக் ஹோம்ஸ் இருப்பதாக நம்பி ஷெர்லாக் ஹோம்ஸ் முகவரி என நாவலில் குறிப்பிடப்பட்டிருக்கும் 221பி பேக்கர் ஸ்டீரிட் முகவரிக்கு கடிதங்களாக எழுதி தள்ளினார்கள் என்றால் அந்த நாவல் எப்படியான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அந்த கொண்டாட்டத்திற்கு தகுதியான நாவல்தான் ஷெர்லாக் ஹோம்ஸ். இப்போதைய திரைப்படங்களில் நாம் பார்க்கும் துப்பறியும் திறன் கொண்ட ஆசாமியை 1800 களின் இறுதியில் ஒரு மனிதன் உருவாக்கியிருப்பது பெரும் ஆச்சரியமான விஷயம்.

130 வருடங்கள் ஆகியும் ஷெர்லாக் ஹோம்ஸ் தாக்கம் இல்லாமல் அதிலிருந்து மாறுப்பட்ட ஒரு புதிய துப்பறிவாளனை இங்கு உருவாக்க முடியாத அளவிற்கு நாம் படித்த அனைத்து துப்பறியும் கதைகளிலும் ஷெர்லாக் ஹோம்ஸ் கலந்துள்ளார்.



கதையை எழுதிய காணன் டாயில் ஒரு மருத்துவர் ஆவார். இவர் ஜோசப் பெல் என்பவரிடம் உதவியாளராக பணிப்புரிந்தார். ஜோசப் பெல் ஒரு துப்பறிவாளர். அவரை வைத்தே ஷெர்லாக் ஹோம்ஸை வடிவமைத்துள்ளார் காணன் டாயில். Adventures of Sherlock Holmes என்கிற பெயரில் ஆங்கிலத்தில் 1892 இல் வெளிவந்த புத்தகத்தின் தமிழ் பதிப்பில் முதல் பாகம் இந்த நூல்.

பி.கு: தற்சமயம் 221பி பேக்கர்ஸ் தெரு என்ற முகவரியை உருவாக்கி அங்கு ஷெர்லாக் ஹோம்ஸிற்கு மியூசியம் கட்டியுள்ளது லண்டன். உலகிலேயே முதன் முதலாக ஒரு கற்பனை கதாபாத்திரத்திற்கு மியூசியம் கட்டியது ஷெர்லாக் ஹோம்ஸிற்குதான்

Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...