Skip to main content

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத்

ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க - கோபிநாத்

பக்கங்கள் : 112

தலைப்பிலேயே ஒரு புத்தகத்திற்கு வார்னிங் கொடுத்த முதல் மனிதர் கோபிநாத் அவர்கள்தான். சுயமுன்னேற்றம் புத்தகத்தை பொறுத்தவரை அதை எழுதுவதற்கு மிக அதிகப்படியான மன முதிர்வு தேவை. எல்லோராலும் அதை எழுதிவிட முடியாது என நினைக்கிறேன்.

மனித மனம் குறித்த மிக ஆழமான அறிவு கொண்டவர்களால் மட்டுமே அதை சரியாக எழுத முடியும். அந்த வகையில் ஜேம்ஸ் க்ளியர் எழுதிய சின்னஞ்சிறு பழக்கங்கள் ஒரு முக்கியமான புத்தகம்.

ஆனால் கோபிநாத்தின் ப்ளீஸ் இந்த புத்தகத்தை வாங்காதீங்க புத்தகம் அவ்வளவு சரியான புத்தகம் என கூறிவிட முடியாது. பல வருட அனுபவத்திற்கு பிறகு கோபிநாத் இப்படி ஒரு புத்தகத்தை எழுத நினைத்திருக்க வேண்டும். ஒருவேளை இப்போது எழுதினால் கொஞ்சம் அவர் சரியாக எழுதி இருக்கலாம்.



பெரும்பாலும் சுயமுன்னேற்ற புத்தகத்தில் அன்றாட வாழ்க்கை குறித்த விஷயங்கள் பதிவு செய்யப்படும்போது பெரும்பாலான மனிதர்கள் இப்படி இருப்பதை பார்க்கலாம் என்றுதான் பதிவு செய்வார்கள். ஆனால் கோபிநாத் புத்தகம் முழுக்க நீங்கள் இப்படி இருக்கிறீர்கள் அது எவ்வளவு பெரிய பிரச்சனை என பேசுகிறார்.

புத்தகம் முழுக்க ஒருமையில் இப்படி அதிகமாகவே பேசியிருக்கிறார். அதே போல வாழ்வதற்கான நோக்கங்கள் மீதும் அவரது பார்வை சரியானதாக தெரியவில்லை. தலைப்புக்கு தலைப்பு தலைவரின் மனநிலை மாறிவிடுவதை பார்க்க முடிகிறது.

ஏழையாய் இருந்தால் மனம் ஏழையாய் சிந்திக்கும். அப்படி குறைவாக சிந்திக்காதீர்கள். ஏழையாய் இருந்தாலும் உங்கள் சிந்தனை கோடி கணக்கில் இருக்க வேண்டும். இப்போது கோடீஸ்வரர்களாக இருக்கும் பலரும் முன்பு ஏழையாக இருந்தவர்களே என்பது கோபிநாத்தின் வாதமாக உள்ளது.

அமேசான் நிறுவனமும் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் இவ்வளவு வருவாய் ஈட்டும் நிறுவனமாக வேண்டும் என்கிற எண்ணத்தில் உருவாகவில்லை. அமேசான் நிறுவனம் துவங்கியப்போது வெறும் புத்தகம் மட்டுமே விற்கப்படும் தளமாகதான் உருவானது. அதன் வெப் இண்டர்ஃபேஸ் கூட அப்போது சுமாராகதான் இருக்குமாம். 

அதே மாதிரி நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனமும் ஒரு காலத்தில் வாடகைக்கு சிடி விற்கும் நிறுவனமாகதான் இருந்தது. அவர்களது எண்ணங்கள் எப்போது பணக்கார அளவில் யோசிக்க துவங்கியது என்றால் அது நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் உருவானப்போதுதான். எந்த பெரும் நிறுவனமும் 1 லட்சம் முதலீட்டில் துவங்கும்போதே 100 கோடியை இலக்காக கொண்டிருப்பதில்லை. நிறுவனத்தின் வளர்ச்சியே அதை முடிவு செய்கின்றன.

அதற்காக மொத்தமாக புத்தகத்தை புறம் தள்ளியும் விட முடியாது. நிறைய விஷயங்கள் புத்தகத்தில் சிறப்பான விதத்தில் கூறப்பட்டுள்ளன. வாழ்க்கையை எப்போதும் எப்படி சுவாரஸ்யமாக வைத்துக்கொள்வது, மகிழ்ச்சியான வாழ்க்கை என்பது என்ன? இப்படி சிலவற்றை கூறலாம்.

ஆனால் ஒருவேளை இப்போது கோபிநாத் எழுதியிருந்தால் இந்த புத்தகம் இன்னமும் சிறப்பாக வந்திருக்கும் என்றே தோன்றுகிறது.


Comments

Popular posts from this blog

திராவிட தேசீயம்! மாநில சுயாட்சி ஏன்? Book Review

  மத்திய சர்க்காருக்கு அந்த சமயத்தில் அறிஞர் அண்ணா செய்த இரண்டு மிகப்பெரிய ஓ.ஜி சம்பவங்கள்தான் திராவிட தேசீயம் மற்றும் மாநில சுயாட்சி. இப்போது வெறுமனே திராவிட கட்சிகளை திட்டி கொண்டிருக்கும் இளம் தலைமுறையினருக்கு இந்த விஷயங்கள் குறித்து தெரிந்திருக்க வாய்ப்பில்லை. திராவிட தேசீயம் இந்தி எதிர்ப்பு போராட்டத்துக்கு பிறகுதான் தமிழ்நாட்டில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே சமயம் திராவிட முற்போக்கு கழகம் முதன் முதலாக ஆட்சி அமைத்தது. அப்போது இருந்தே அண்ணாவுக்கு இருந்த மிகப்பெரிய நெருடல் மத்திய சர்க்கார் நினைத்தால் எதை வேண்டுமானாலும் மாநில அரசில் நிறைவேற்ற முடிகிறது. எனவே நமக்கான உரிமைகள் நம்மிடம் இருக்க வேண்டும் என நினைத்துள்ளார். அந்த வகையில் அவருக்கு வந்த எண்ணம்தான் திராவிட தேசீயம். தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, கர்நாடகா (அப்போது தெலுங்கானா இருக்கவில்லை) ஆகிய நான்கு மாநிலங்களை ஒன்றிணைத்து தனி திராவிட நாடு ஒன்றை உருவாக்க நினைத்தார் அண்ணா. இந்தியாவில் இருந்து பிரியும் இந்த நாடு தனிப்பட்டு செயல்படும் என்பது அவரது எண்ணம். திராவிட தேசீயம் என்று ஒரு விஷயம் கிடையாது. திராவிடம் என்பதே அண்ணா உருவாக...

மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி

  மாயி-சான்- ஹிரோசிமாவின் வானம்பாடி உலகில் மனிதர்களால் நடத்தப்பட்ட பேரழிவுகளில் காலத்தால் மறக்கப்படாத அமெரிக்காவை என்றென்றும் மனித நேயமற்ற நாடு என அழைக்கவும் காரணமாக இருந்த நிகழ்வு ஹிரோஷிமாவில் அமெரிக்கா நடத்திய அணுகுண்டு தாக்குதல். அதுவும் பயன்படுத்துவதற்கு எந்த ஒரு தேவையும் இல்லாதபோது தனது ஆயுத சக்தியை உலகிற்கு காட்டி அச்சத்தை உண்டாக்க மட்டுமே அமெரிக்கா செய்த ஒரு செயல்தான் இந்த அணுகுண்டு தாக்குதல். அணுகுண்டு தாக்குதல் நடந்த சமயத்தில் இருந்து ஹிரோஷிமாவில் என்ன மாதிரியான நரக வேதனைகள் நடந்தன. தப்பி பிழைத்தவர்கள் எதை பார்த்தார்கள், எங்கு சென்றனர். என்ன நடந்தது என்பதை விளக்குகிறது இந்த புத்தகம். புத்தகத்தில் விளக்கும் மாயி சான் வெளியே நின்று வேடிக்கை பார்த்தவர் அல்ல. அந்த ஹிரோஷிமா விபத்தில் பாதிகப்பட்டவர். காலை உணவை உண்ண அமர்ந்த மாயி சான் திடீரென பெரு வெடிப்பு சத்ததை கேட்கிறார். அதனை தொடர்ந்து அவர் பார்வையில் என்னவெல்லாம் அவர் பார்க்கிறார் என்பதை புத்தகம் விளக்குகிறது. எப்போதும் இந்த அணுகுண்டு தாக்குதல் பற்றிய புத்தகங்களில் அமெரிக்கா தொழில்நுட்ப ரீதியாக செய்த விஷயங்கள் அதிகமாக...

பணம் சார் உளவியல் - Psychology of Money Book Intro

பணம் சார் உளவியல் - Psychology of Money மார்கன் ஹௌஸ்ஸேல் பக்கங்கள்:266 பணம், சேமிப்பு, சுய தொழில் துவங்குவது என பலவற்றை குறித்தும் ஞானத்தை வழங்கும் புத்தகமாக பணம்சார் உளவியல் புத்தகம் இருக்கிறது. மிக முக்கியமாக சேமிப்பு பழக்கம் மற்றும் சேமிப்பை பெருக்குவதற்கு எதிலெல்லாம் நாம் பணத்தை முதலீடு செய்யலாம் என்பதை பற்றி விரிவாக பேசப்பட்டுள்ளது. அதில் ஆகா என வியக்கும் அளவில் சில விஷயங்கள் இருந்தன. அவற்றை மட்டும் இங்கு விளக்கலாம் என நினைக்கிறேன். நாம் எந்த காலத்தில் பிறக்கிறோம் என்பதை பொருத்து நாம் முதலீடு செய்வதும் சேமிப்பதும் மாறுபடும் என்பது ஆசிரியரின் கருத்தாக இருக்கிறது. அது ஒரு வகையில் உண்மையும் கூட. அமெரிக்காவில் பங்கு சந்தை வீழ்ச்சி அடைந்த காலக்கட்டத்தில் வளர்ந்த ஒருவன், பங்கு சந்தை வீழ்ச்சி முடிந்த பிறகு பிறந்தவனை விட குறைந்த அளவிலேயே பங்குசந்தை முதலீடு குறித்து யோசிப்பானாம்.  ஏனெனில் அவன் வாழ்ந்த காலத்தில் அவன் பங்கு சந்தை முதலீட்டின் ஆபத்து குறித்து அறிந்தவன். ஆனால் பிறகு பிறந்தவன். அந்த ஆபத்தை அனுபவிக்காதவனாக இருக்கிறான். உதாரணத்திற்கு வங்க பஞ்சம் நிகழ்ந்த காலத்தில் பிறந்த ஒரு ந...